Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
[28 - March - 2008] [Font Size - A - A - A]
-ரொஷான் நாகலிங்கம் -

லிபியாவில் ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்ததுடன் இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்,

சுகாதாரம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு லிபியாவில் தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் முகமாக கடந்த மாதம் அந்நாட்டு தொழில் அமைச்சருடன் நாம் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்முதலில் 1976 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா லிபியாவுடன் இராஜதந்திர உறவுக்கான உடன்படிக்கையை கடாபியுடன் மேற்கொண்டார்.

எனினும் இந்த உறவுகள் சில காரணங்களுக்காக முழுமை பெறாத நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே இராஜ தந்திர உறவுகள் மீண்டும் வலுப்பெற்று முழுமை பெற்றுள்ளது.

மேற்படி ஒரு இலட்சம் தொழிலாளர்களை லிபியாவுக்கு அனுப்புவதற்கான பொறுப்பினை நாம் முகவர்களுக்கோ உபமுகவர்களுக்கோ வழங்காது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமே மேற்கொள்ளும். ஏனெனில், முறையான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்புவதே எமது நோக்கமாகும்.

இது இவ்வாறிருக்க இத்தொழிலாளர்களை தெரிவு செய்வதற்கான லிபிய தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளது. அவர்களே தொழிலாளர்களை தெரிவு செய்வார்கள். இது இவ்வாறிருக்க டுபாய், பஹ்ரேய்ன், கட்டார் ஆகிய இப்பகுதியிலுள்ள நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பினை மேலும் பெற்றுக் கொடுப்பதற்கு நான் அங்கு வருகின்ற காலங்களில் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளேன்.

தற்போது லிபியாவுக்கான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சுகாதாரத்துறை கீழ் மட்டத்தில் உள்ளது. இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அந்நாடு ஆர்வம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவான சுகாதார துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க முடியுமென எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் லிபியாவின் சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு இலங்கை "சுகாதார கிராமமொன்றை" அங்கு அமைத்து பங்களிக்கவுள்ளது. இங்கு பணியாற்றுபவர்கள் முழுவதும் இலங்கையராகவிருப்பர். அங்கு பணிபுரியச் செல்வோருக்கு 3 அல்லது 5 வருட ஒப்பந்தங்களை மேற்கொண்டு அனுப்பவுள்ளோம்.

தென்கொரியாவில் தொழிலாளர் ஒப்பந்தம் நிறைவுபெறவுள்ள நிலையில், மாதம் 29 ஆம் திகதி மீண்டும் புதிப்பிப்பதற்கான ஒப்பந்தத்தினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரித்து செல்வதனால் எதிர்காலத்தில் ஜனாதிபதி பெண்தொழிலாளர்கள், அனுப்புவதில்லை என்ற நிலைப்பாடுகளுக்கு சாதகமாக அமையும்.

இது இவ்வாறிருக்க மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கான சம்பளத்தினை குறைந்தது 25 ஆயிரமாக பேணுவதற்கு பேச்சுக்களை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் 15 ஆயிரம் பெற்ற தொழிலாளர்கள் 25 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெறுவதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பின்றி இருப்போர் அதில் நாட்டம் காட்டுவர் இதனால் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருப்போரின் தொகை குறையும் என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போது குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் 45 பேருக்கும் மீண்டும் இலங்கை வருவதற்கான விமான டிக்கெட்டினை நவலோக்க நிறுவனத்தைச் சேர்ந்த தர்மதாசா அமைச்சரிடம் கையளித்தார்.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com