Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
[28 - March - 2008] [Font Size - A - A - A]
-யோ. நிமல்ராஜ்-

கேதீஸ்வரன் இறுதியாகத் தனது தந்தையுடன் தொலைபேசியில் உரையாடிய போது மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியவில்லையென்றும் தமது திருகோணமலை அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெறுவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வந்து கூட்டிச் செல்வார்கள் எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

"நான் தம்பலகாமத்தில் வசிக்கிறேன். மாதவராசா கேதீஸ்வரன் அக்ஷன் பாம் நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு மேலாகக் கடமை புரிகின்றார். கேதீஸ்வரனின் தந்தை மாதவராசா தாயார் ஷ்ரீ ரங்கநாயகி. இவர் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினேழாம் திகதி பிறந்தார். பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் க.பொ.த. உயர்தரத்தில் கணித பாடத்தை படித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலாளர் கற்கை நெறியை தொடர்ந்திருந்தார். ஆனால், அதனைப் பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், கமத்தொழிலை செய்து வந்த இவர், முதன்முறையாக அக்ஷன் பாம் நிறுவனத்தில் வெளிக்கள உத்தியோகத்தராகப் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த திகதி எனக்கு ஞாபகமில்லை.

ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாக அவர் முழுநேர வேலையாளராக இருந்தார்.

அக்ஷன் பாமால் நிர்மாணிக்கப்படும் வீதிகளை மேற்பார்வையிடும் பணியையும் அகதிகளிற்கான உதவிகளையும் இவர் மேற்கொண்டிருந்தார். இவருடைய அலுவலகம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இவர் தனது பணியை மேற்கொண்டதுண்டு.

வழமையில் திங்கட்கிழமை காலை தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் புறப்படும் இவர், வெள்ளிக்கிழமை மாலையிலேயே திரும்ப வீட்டுக்கு வருவார்.

சனியும் அவர்களுடைய அலுவலக நாளென்பதால் ஞாயிற்றுக்கிழமையில் தான் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

கூடுதலாகத் தனது மூதூர் அலுவலகத்திலேயே அவர் தங்குவது வழமை.

அலுவலகம் செல்வதற்கு அவர்களது வாகனத்தையே வழமையில் பயன்படுத்துவார்கள். ஆனால், வாகனம் கிடைக்காத பட்சத்தில் வள்ளத்தின் மூலம் கடமைக்குச் செல்வார்.

31 ஆம் திகதி ஜூலை 2006 இல் அவரது வீட்டிற்கு நான் சென்ற போது அன்று தான் அவர் வீட்டிலிருந்து கடமைக்குச் சென்றதாகக் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து முதலாம் திகதி மூதூர் பிரச்சினை ஆரம்பித்து விட்டதாகப் பரவலான பேச்சுகள் மூலம் அறியக் கூடிய அதேநேரம், வெடிச்சத்தங்களையும் கேட்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் மூதூர் அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய பதினேழுபேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பரவலான பேச்சுகள் பரவின.

இதனை உறுதி செய்வதற்காக திருகோண மலையிலுள்ள அக்ஷன் பாம் அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது அங்கு அதற்குரிய பதிலை எவரும் சரியாகத் தரவில்லை. தரக் கூடிய அதிகாரிகள் அங்கு இருக்கவும் இல்லை. இந்த அலுவலகத்திற்கு நான் ஞாயிற்றுக்கிழமையே சென்றிருந்தேன். அத்துடன், அன்றுதான் இவர்கள் கொல்லப்பட்ட செய்தியும் எனக்குத் தெரியும்.

இதேவேளை, இதனை உறுதிசெய்துகொள்ள மூதூரிற்கு செல்லக்கூடிய நிலைமை அன்றைய சூழ்நிலையில் இல்லை. இதனைத் தொடர்ந்து இவர்களது உடல்கள் திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்ட பின்னர், அங்கிருந்த மருத்துவர் ஒருவரால் நான் கேதீஸ்வரனின் உடலை அடையாளம் காண்பதற்காக அழைக்கப்பட்டேன்.

அவரது சுருண்ட முடி, பல் மற்றும் அவர் வழமையாகப் பாவிக்கும் சறம் என்பவற்றைக் கொண்டு நான் உடலை அடையாளம் கண்டுகொண்டேன். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து, அன்று பகல் 12.30 மணியளவில் உடல் எம்மிடம் பெட்டியில் வைக்கப்பட்டு அவரது படம் பெட்டியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் உடல் எம்மிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு 45 நிமிடங்கள் மட்டுமே உடலை வைத்திருந்தோம். அதனைத் தொடர்ந்து திருகோணமலை இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் விசாரணைகளுக்காக உடலைத் தோண்டி எடுக்க வேணுமென்றும் அதற்காகப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுமாறும் என்னை அழைத்ததன்பேரில் நான் சென்று அடையாளம் காட்டினேன்.

அப்போது அங்கு பொலிஸ், நீதிபதி, மருத்துவர்கள் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர். ஆனால், புதைத்த இடத்திலிருந்து பெட்டியை வெளியில் எடுத்துத் திறந்தபோது உடல் அடையாளம் காண இயலாதவாறு சிதைவடைந்திருந்தது. ஆனால், பெட்டியில் அவரது படம் ஒட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உடல் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு பரிசோதனைகள் முடிவடைந்த பின் அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, உடல் புதைக்கப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால், நான் அவ்விடத்தில் இருக்கவில்லை.

நான் அறிந்தவகையில் அவருக்கு எதிரிகள் எவரும் இருக்கவில்லை. அத்துடன் இராணுவத்தினருடனோ, பொலிஸாருடனோ, விடுதலைப்புலிகளுடனோ தொடர்புகள் வைத்திருக்கவும் இல்லை. அவ்வமைப்புகளுக்கு ஆதரவாகவும் இருந்ததில்லை.

அத்துடன், இச் சம்பவம் நடந்த இடத்திற்கு நான் செல்லவில்லை என்பதால் அதன் சூழல் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் எதையும் கூறமுடியாது. கேதீஸ்வரன் அங்கு சென்ற பின்னர் தனது தந்தையாருடன் தொலைபேசியில் பேசும்போது மூதூர் நிலைமை மோசமாக உள்ளதால் தனியாக வர இயலவில்லையென்றும் தமது திருகோணமலை அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெறுவதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்து கூட்டிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்காம் திகதி காலை 9 மணிக்குப் பின்னரே இவர் மாணிக்கராஜா என்பவருடைய வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி தந்தையாருடன் உரையாடினார். ஆனால், மாணிக்கராஜா குடும்பத்தினர் தற்பொழுது இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்றுவிட்டனரெனத்" தெரிவித்தார்.

இத்துடன் நேற்று இவரது சாட்சியம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com