கல்கிசையில் இருந்து மட்டக்குளியை நோக்கி வந்து கொண்டிருந்த 155 தனியார் பஸ்ஸில் பயணம் செய்த பாடசாலை சீருடை அணிந்த மாணவி ஒருவருடன் முறைகேடாக நடந்து கொண்ட நபர் ஒருவர் சக பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு துறைமுக கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த பஸ் கொட்டாஞ்சேனையில் தரித்து நின்றபோது பல மாணவிகள் ஏறி பயணிகளுடன் நெருக்கமாக நின்றனர். அப்போது இவர் தனது செயலில் ஈடுபட்டார்.
இதனை பஸ்ஸின் பின்புறமாக இருந்து பயணம் செய்த சிலர் அவதானித்தனர். பஸ் கொட்டாஞ்சேனையில் இருந்து புறப்பட்டதும் அவர்கள் இவரைப் பிடித்து தாக்கியதுடன் ஹெட்டியாவத்தை சந்தியில் பஸ்ஸை நிறுத்தி அவரை இறக்கிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.