Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
[28 - March - 2008] [Font Size - A - A - A]
* மொறட்டுவையில் வசித்த வீடும் சீல் வைப்பு

மொறட்டுவையில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பட்டதாரி மாணவர்கள் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளதாக உறவினர்களும் நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.ராதாகிருஸ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.

மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர்கள் மூவரும் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தாகவும், கடந்த 24 ஆம் திகதி இரவு ஏழு மணியளவில் வெள்ளை நிற வானில் சிவில் உடையில் வந்தவர்கள் இவர்கள் தங்கியிருந்த தொடர்மாடி வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டு மூன்று மாணவர்களையும் வானில் ஏற்றிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கஜன் பட்டயக்கணக்குப் பயிற்சி செய்பவர் என்றும் இரண்டு வாரங்களில் செல்வரஞ்சன் லண்டன் செல்வதற்கு கல்வி விசா பெற்றுள்ளதாகவும் ஆரூரன் எம்.எஸ்.ஸி பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் கைதானார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்று அறியமுடியாமல் இருப்பதாகவும் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததாகவும் இவர்களின் பெற்றோர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாணந்துறை கெசல் வத்தைப்பகுதியில் தாயுடன் வசித்து வந்த இளைஞரான ராஜேந்திரன் பிரதீப்குமார் (வயது 27), கொழும்பு கடற்கரைப்பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாயாரான ராஜேந்திரன் ராஜேஸ்வரி பிரதி அமைச்சரிடம் புகார் செய்துள்ளார்.

மேற்படி இளைஞர் கணினித் தொழில் புரிபவர் என்றும் பிறந்தது முதல் பாணந்துறைப் பகுதியிலேயே வசித்து வருவதாகவும் எதுவிமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்றும் தந்தையார் ராஜேந்திரன் கட்டார் நாட்டில் கணக்காளராகப் பணிபுரிவதாகவும் தாயார் மேலும் தெரிவித்ததுடன், தனது மகனை விடுவித்துத் தருமாறும் கேட்டுள்ளார்.

மொறட்டுவை மாணவர்கள் தொடர்பாகவும் பாணந்துறை இளைஞர் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com