தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வியாழக்கிழமை பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை விக்டோரியா நினைவரங்கம் முன்பாக மாலை 5 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் இராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இயக்குனர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இலங்கை, தமிழக, மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், பதாகைகளும் கொண்டு செல்லப்பட்டன.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.