கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு தொடர்மாடிக் கட்டிடத்திலுள்ள மனைகளில் பெரும்பாலானவை விற்பனையாகிவிட்டன. ஆனால், இரண்டொரு மனைகளில் மட்டுமே குடியிருப்பாளர்களைக் காணக்கூடியதாக இருந்தது.
ஏனைய மனைகள் காலியாகக் கிடப்பதைப் பார்த்து ஒருவர், "இந்த வீடுகளை வாங்கியவர்கள் ஏன் குடியிருக்க வரவில்லை?" என்று குடியிருப்பாளர் ஒருவரிடம் விசாரித்தார். அவர் சொன்ன பதில் சற்றுச் சிந்திக்க வைத்தது.
பணவசதி படைத்தவர்கள் இந்த மனைகளை வாங்கிவிட்டு, வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கொடுக்க இருக்கிறார்கள். காலப்போக்கில் இம்மனைகளின் பெறுமதி அதிகரிக்குமென அவர்கள் நினைக்கிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவசியமாயின் நல்ல விலைக்கு விற்றுவிடுவது அவர்களின் திட்டம். அதாவது இதை ஒரு இலாபகரமான முதலீடாகவே அவர்கள் கருதுகிறார்கள் என்றாராம் அந்தக் குடியிருப்பாளர்.
வீடு, காணிகளில் போடும் பணம் நல்ல முதலீடுதான்.