Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஈரானிய ஜனாதிபதி ஈராக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம்
[03 - March - 2008] [Font Size - A - A - A]
ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் ஈராக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

1980 களில் இரு நாடுகளுக்குமிடையிலும் இடம்பெற்ற யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பலியான பின்னர் ஈரானிய ஜனாதிபதியொருவர் ஈராக்கிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

அஹமதி நிஜாத்தின் இவ் இரு நாள் விஜயம் ஸியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஈராக்கிய அரசுக்கு தனது பலமான ஆதரவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது விஜயத்தை முன்னிட்டு பாக்தாத் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விஜயத்தின் போது அஹமதி நிஜாத் ஈராக் ஜனாதிபதி ஜலால் தலபானி மற்றும் பிரதமர் நூரி-அல் மாலிகி ஆகியோரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் விஜயமானது ஈராக்கிற்கும் ஈரானுக்குமிடையில் பலமான உறவைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கான அடையாளமாக பலராலும் நோக்கப்படும் அதேவேளை, இதனை ஈரானின் நீண்ட கால எதிரியான அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், அணுவாயுத விவகாரம் தொடர்பிலும் ஈராக்கிலுள்ள போராளிகளுக்கு உதவி வழங்குவதாகவும் ஈரான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அமெரிக்கா 150,000 இற்கும் அதிகமான தனது படைகளை ஈராக்கில் வைத்துள்ள போதிலும் இவ் விஜயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தனது படைகளை ஈடுபடுத்தாதன் மூலம் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தனது விஜயத்திற்கு முன்பாக கருத்துத் தெரிவித்த அஹமதி நிஜாத் தனது விஜயத்தின் மூலம் ஈராக்கின் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுமெனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
அணுசக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஒருமாத காலக்கெடு
நாஜிப்படையினரின் தங்கப் புதையல் தேடும் பணியில் திருப்பம்; குகை கண்டுபிடிப்பு
இந்தியாவின் கடலடி ஏவுகணைப் பரிசோதனையால் அப்பிராந்தியங்களில் ஆயுதப் போட்டி அதிகரிக்கும்
ஈரானிய ஜனாதிபதி ஈராக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம்
முஷாரப் பதவி விலகமாட்டார் இராஜிநாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி
காஸாவில் இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் ஐ.நா. அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com