வட போர் முனையான கிளாலி முகமாலைக் களமுனைகளில் தமது சினைப்பர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாலி, முகமாலைக் களமுனைகளில் சனி, ஞாயிறுதினங்களில் நடந்த மோதல்களின் போது புலிகள் படையினர் மீது சினைப்பர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 4 படையினர் கொல்லப்பட்டதாகவும் 8 படையினர் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர்.