Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜெனீவாவில் இன்று தொடங்கும் மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை
[03 - March - 2008] [Font Size - A - A - A]
ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையில் வடக்கு- கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல், கைதுகள், தடுத்துவைப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் குறித்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் கடுமையான அறிக்கைகளையும் கண்டன அறிக்கைகளையும் வெளியிடவுள்ளன.

இலங்கையில் நிலைமைகள் மிக மோசமடைந்து வருவது தொடர்பாக சித்திரவதைகள் மற்றும் ஆட்கள் காணாமல்போதல் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மல்பிரட் நொவாக் நீண்ட விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கெதிராக பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேசக் கூட்டணிகளால் கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிறவுண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு அலுவலகமொன்றை அமைக்க வேண்டுமென்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் சிபாரிசை ஆதரிக்கும் வகையிலும் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் நாடுகளும் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மலோக் பிறவுண் கூறியுள்ளார்.

இதேநேரம், இந்தக் கூட்டத்தொடருக்காக இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளும் நேற்று ஜெனீவா சென்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தொடரில் இவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்குமென வும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஜெனீவாவில் இன்று தொடங்கும் மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 6 பொதுமக்கள், 4 படையினர் காயம்
கிளைமோர் தாக்குதலில் இராணுவ வீரர் பலி
சினைப்பர் தாக்குதலில் 4 படையினர் பலி
ஆண்களை பொது இடத்திற்கு கொண்டு சென்று குருநகரில் அதிகாலை முதல் பாரிய தேடுதல்
500 மில்லியன் டொலர் ஆயுதங்களை இலங்கைக்கு ரஷ்யா வழங்குகின்றது
ஆலையடிவேம்பில் வர்த்தகர் சுட்டுக் கொலை கடும் தாக்குதலில் மனைவி, பிள்ளைகள் படுகாயம்
வடக்கே கடும் மோதல் தொடர்கிறது இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம்
வடக்கை மீட்கும் எமது இலக்குக்கு தடையாக எதுவந்தாலும் அதனை உடைத்தெறிவோம்
வடக்கே கடும் மோதல் தொடர்கிறது இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம்
ெதன்பகுதியிலும் ஆட்கடத்தல் ஆரம்பம் இரு தமிழ் இளைஞர்களை காணவில்லை
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி
மிக் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தன
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டும் கதிர்காமத்துக்கு வர பக்தர்கள் அச்சம்
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகிறது
இரத்தினபுரி மாவட்ட பெரும்பான்மையின பாடசாலைகளில் பர்தா அணியத் தடை; முஸ்லிம் மாணவிகள் பெரும் பாதிப்பு
மாணவர்களின் வீதி மறியல் போராட்டம் அதிபரை இன்று நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
9 கோடி ரூபா செலவில் புதிய செயலக கட்டிடங்கள்
`கூட்டு எதிர்க்கட்சியை அமைக்க ஐ.தே.க. தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்'
பொலிஸ் இன்ஸ்பெக்டரும் பொலிஸ் உதவியாளரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பெனக் கூறி கைது
மண்கிண்டி மலையில் கடும் மோதல் 6 இராணுவத்தினர் பலி; பலர் காயம்
உடல்நிலை மோசமானதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அநுரா அனுமதி
இத்திக்கண்டல் நோக்கி முன்னேறிய படையினரின் முயற்சி முறியடிப்பு
வடக்கு, கிழக்கு பிரதேச சபைகளில் `றோ' முகவர்களை அமர்த்த இந்தியா விரும்புகிறது
இரத்மலானை விமான நிலைய பகுதியில் வெடித்த அமுக்க வெடியினால் பதற்றம்
யாழ். பல்கலைக்கழக மாணவனை 28 ஆம் திகதி முதல் காணவில்லை
கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சாரதிகள் அமைச்சர் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்
புதிய கற்றல், கற்பித்தல் முறைகள் மாணவர்களை நற்பண்புள்ள பிரஜைகளாக மாற்ற வேண்டும்
உத்தேச தொழில்நுட்பக் கல்லூரி புத்தளம் நகரிலேயே அமைய வேண்டும்
ஜனாதிபதி மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இந்திய வம்சாவளியினரின் சுயவிபரங்கள் சேகரிக்கும் வேலைத்திட்டத்தினை தடுத்து நிறுத்த கோரிக்கை
பொதுத்தேர்தலைக்கோரும் ஐக்கிய தேசியக்கட்சி மட்டக்களப்பில் போட்டியிடாதது ஏன்?
தேர்தல் வரும்போது மட்டுமே சமூக உணர்வு ஞாபகத்திற்கு வரும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com