இந்தியாவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ள இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அதற்கு முன்பாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது அங்கு வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் பாலசூரியவால் வரவேற்று அழைத்துச் செல்லப்படுவதை இங்கு காணலாம்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அந்நாட்டின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழு உதவித் தலைவரும் அகில சீன மகளிர் சம்மேளனத்தின் தலைவருமான கூ. கே. யூலியனை சந்தித்த போது அவர் சிராந்தி ராஜபக்ஷவுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்குவதையும் அருகில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சரத் அமுனுகமவையும் இங்கு காணலாம்.