பாகிஸ்தானில் அமைதியான சூழல் நிலவுவதால் அவுஸ்திரேலிய அணி திட்டமிட்டபடி கிரிக்கெட் விளையாட வரவேண்டுமென்று அணியின் பயிற்சியாளர் லோசன் வலியுறுத்தியுள்ளார்.
பெனாசிர் பூட்டோவின் படுகொலையை தொடர்ந்து பாகிஸ்தானில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகக் கூறி அங்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி மறுத்து வருகிறது. இதனால், இந்த தொடர் இரத்தாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜெவ் லோசன் கூறுகையில்;
பாகிஸ்தான் மக்கள் விருந்தினரை மதிக்கும் பண்பு கொண்டவர்கள். கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பவர்கள். இந்தத் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவுஸ்திரேலிய அணி இங்கு வரவில்லையென்றால் இங்குள்ள ரசிகர்கள் ஏமாற்றமடைவது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் விளையாட்டுத் துறைக்கே பெரும் பின்னடைவாக இருக்கும். எனவே, அவர்கள் இங்கு வந்து திட்டமிட்டபடி கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டுமென்று கேட்டுள்ளார்.