கொள்ளையர்களினால் கடத்தி செல்லப்பட்ட வவுனியா சமயபுரம் வாசியும் சமாதான நீதிவானுமாகிய தொப்பன் இராமசாமி (வயது 62) யை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர் தனது வீட்டில் படுக்கையில் இருந்தபோது மூன்று ஆட்டோவில் வந்த ஆயுததாரிகளால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை நடத்துமாறு வவுனியா பொலிஸ் அத்தியட்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிறு மாலை சமயபுரம் பகுதிக்கு வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் மகேஷ் தவச்செல்வம் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விஜயம் செய்து சமாதான நீதிவான் கடத்தல் தொடர்பாகவும் அங்கு நடைபெற்ற அசம்பாவிதம் குறித்தும் கிராம மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கிராம விழிப்புக்குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்துள்ள சமயபுரம் கிராமவாசிகள் கடத்தி செல்லப்பட்டவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.