ஹெல உறுமய கட்சியை சேர்ந்த எல்லாவல மேதானந்த தேரர் எம்.பி. தன்னை புலிஆதரவாளர் என்றுகூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு ஷ்ரீ மங்கள ராமய விகாராதிபதி அம்பப்பிட்டிய சுமணரத்தின தேரர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
மியன்மாரிலிருந்து மலேசியா நோக்கிச் செல்கையில் பழுதடைந்த நிலையில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தத்தளித்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்ட கப்பலையும் அதில் சென்றவர்களில் ஒருவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்படுவதையும் பட்டினியால் வாடியவர்கள் திருமலை துறைமுகத்தில் உணவருந்துவதையும் காணலாம்.