* காம்பீர் கூறுகிறார்
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளதாக கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க காம்பீர் போராடி வருகிறார். இதுவரை 5 முறை அவர் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒரு நாள் தொடரில் காம்பீர் அதிக ஓட்டங்களைக் குவித்து முதலிடத்திலுள்ளார். அவர் 2 சதங்களை அடித்துள்ளார்.
இந்நிலையில் காம்பீர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்திருப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
``20 ஓவர் உலகக் கிண்ணத்தில் நான் சிறப்பாக ஆடினாலும், அவுஸ்திரேலிய பயணம் தான் என்னைப் பொறுத்தவரை முக்கியமானது. அவுஸ்திரேலியாவில் ஓட்டம் குவிப்பது உயர்வானது.
என்னை டெண்டுல்கரோடு ஒப்பிட்டுகின்றனர். தயவு செய்து சச்சினோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் சிறப்பாக ஆடி இந்தியா வெற்றிபெறுவது மகிழ்ச்சியை தருகிறது. பகவத் கீதை படிக்கத் தொடங்கியதிலிருந்து என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. தோல்வியை எதிர் கொண்டு சவால்களை சந்திக்க கீதை கைகொடுக்கிறது" என்றார்.