Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
[05 - March - 2008] [Font Size - A - A - A]
* முன்னணியின் உபதலைவர் தெரிவிப்பு

நுவரெலியா மாவட்ட வாக்காளர் பட்டியல் தமிழ் மொழியில் வெளியிடப்படாமைக் குறித்து இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி மனித உரிமை இல்ல அனுசரணையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டமையானது வரவேற்கத்தக்க விடயமாகுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

"ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்புகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு மீளாய்வு செய்யப்படுகின்ற காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர் விபரப்பட்டியல்கள் தமிழ் மொழியில் வெளியிடப்படுவதில்லை. இதனால், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தமையை இ.தொ.ஐ. முன்னணி தேர்தல் ஆணையாளருக்கு பல முறை சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், இவ்விடயம் குறித்து தேர்தல் திணைக்களம் உரிய கவனம் செலுத்த வில்லை.

இந்த நிலையில். நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட 2007 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானித்தது.

இதற்கேற்ப கொழும்பு மனித உரிமைகள் இல்லத்தின் அனுசரணையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தோம்.

இந்த மனுவை கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வாக்காளர் இடாப்பினை தமிழ் மொழியில் வெளியிடாமை தொடர்பான விடயம் குறித்து பதில் மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட பிரதேச வாக்காளர் இடாப்பில் பெயர் பதிய முடியாமலுள்ள தமிழர்களுக்கு இதுவொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மேலும் எனது ஆர்வத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற மனித உரிமை இல்லத்துக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Email this page Your Opinion Print this page
அநுராவுக்கு கடும் சுகவீனம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஜே.வி.பி. யுடன் பேசுவார்
சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார் பிரதம நீதியரசர்
பெரியமடுவில் உழவு இயந்திரத்தில் சென்ற 4 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
கிளைமோர்கள், வெடிபொருட்கள் கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் மீட்பு
அக்கரைப்பற்றில் வயற்பகுதியில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் சடலம்
கிழக்கு தேர்தல் தொடர்பான பவ்ரலின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
சமாதானத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தை துணிவுடன் வெளிப்படுத்துமாறு அழைப்பு
சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
தம்புள்ள குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களப் பெண்ணுக்கு விளக்கமறியல்
உள்ளூராட்சி தேர்தல் நீதியாக நடைபெறும் பவ்ரல் அமைப்பிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி முகவருக்கு 8 வருட சிறைவாசம்
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தையும் மகனும் சரண்
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள்
சிவராத்திரி தினத்தில் ஊரடங்கு நீக்கம்
வடமேல் மாகாணசபை, புத்தளம் நகரசபை உறுப்பினர்களின் வாகனம் ,வீடு மீது தாக்குதல்
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 பேர் விடுவிப்பு உறவினர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பு
சிறுவர் துஷ்பிரயோகம், கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணம்
கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு வரும்போது பலத்த கெடுபிடிகள்
ஹல்தும்முல்லையில் பஸ்-லொறி விபத்து பாடசாலை மாணவர் உட்பட 34 பேர் காயம்
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு இராணுவத்தலையீடுகள் வருமெனில் அதனை முறியடிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்
ஆட்டை மோதிய இ.போ.ச. பஸ் சாரதி தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்தார்
மாணவர்களின் வீதிமறியல் போராட்டம் அதிபர், உப அதிபரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
`வாக்காளர் பதிவு தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்'
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் எனது வாழ்க்கையில் திருப்புமுனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com