Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
[05 - March - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவிப்பு

ரொஷான் நாகலிங்கம்

பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக சகல உரிமைகளுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பது நாட்டின் தற்போதைய தேவையாகுமென தெரிவிக்கும் நிர்மாண மற்றும் பொறியியல் சேவை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண, இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு தனது பூரண ஆதரவை வழங்குமெனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு கிருலப்பனையிலுள்ள அதன் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நாட்டின் தற்போதைய தேவையாகும். இதற்கு எமது கட்சி தனது முழு ஆதரவை வழங்கும்.

இதற்காக 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை எமக்கு திருப்தியளிக்கின்றது. எனினும், இந்த விடயத்தில் யதார்த்தத்துக்கு ஏற்ற வகையில் அவர் செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தில் அவரது கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியபோது, அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சஜித் பிரேமதாசா ஆகியோர் கலந்துகொள்ளாமல் சொக்ஷி, ருக்மன் சேனநாயக்க ஆகியோரே கலந்துகொண்டனர். ஏனெனில் அவர்கள் அவருக்கு ஆமாம் போடுபவர்கள். இதன்மூலம் நாம் இதனை விளங்கிக்கொள்ள முடியும்.

17 ஆவது யாப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொள்வதிலும் பார்க்க அதனை நடைமுறைப்படுத்துவதற்கான, அனுமதிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வலுவிழந்துள்ளது. அகங்கல பிரதேசத்தில் அக்கட்சியின் மகாநாடு நடைபெற்றபோது அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதனை உறுதி செய்கின்றது.

அதாவது ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களே அதில் கலந்துகொண்டனர். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை அக்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க தயாராகிவருவது புலனாகின்றது என்றார்.

Email this page Your Opinion Print this page
அநுராவுக்கு கடும் சுகவீனம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஜே.வி.பி. யுடன் பேசுவார்
சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார் பிரதம நீதியரசர்
பெரியமடுவில் உழவு இயந்திரத்தில் சென்ற 4 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
கிளைமோர்கள், வெடிபொருட்கள் கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் மீட்பு
அக்கரைப்பற்றில் வயற்பகுதியில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் சடலம்
கிழக்கு தேர்தல் தொடர்பான பவ்ரலின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
சமாதானத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தை துணிவுடன் வெளிப்படுத்துமாறு அழைப்பு
சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
தம்புள்ள குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களப் பெண்ணுக்கு விளக்கமறியல்
உள்ளூராட்சி தேர்தல் நீதியாக நடைபெறும் பவ்ரல் அமைப்பிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி முகவருக்கு 8 வருட சிறைவாசம்
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தையும் மகனும் சரண்
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள்
சிவராத்திரி தினத்தில் ஊரடங்கு நீக்கம்
வடமேல் மாகாணசபை, புத்தளம் நகரசபை உறுப்பினர்களின் வாகனம் ,வீடு மீது தாக்குதல்
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 பேர் விடுவிப்பு உறவினர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பு
சிறுவர் துஷ்பிரயோகம், கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணம்
கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு வரும்போது பலத்த கெடுபிடிகள்
ஹல்தும்முல்லையில் பஸ்-லொறி விபத்து பாடசாலை மாணவர் உட்பட 34 பேர் காயம்
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு இராணுவத்தலையீடுகள் வருமெனில் அதனை முறியடிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்
ஆட்டை மோதிய இ.போ.ச. பஸ் சாரதி தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்தார்
மாணவர்களின் வீதிமறியல் போராட்டம் அதிபர், உப அதிபரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
`வாக்காளர் பதிவு தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்'
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் எனது வாழ்க்கையில் திருப்புமுனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com