யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை சிவராத்திரி தினத்தில் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களைப் போல் இம்முறையும் யாழ் மாவட்ட மக்கள் மகா சிவராத்திரி தினத்தில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் சென்று இரவு அங்கு நடைபெறும் நான்கு சாமபூஜையில் கலந்து கொள்ளவும் அதிகாலை கீரிமலை கேணியில் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இளவாலை சேத்தான்குளம் சோதனைச் சாவடியூடாக செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் அடியார்கள் கசூரினா தீர்த்தக்கரையில் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.