தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் 9 ஆம் திகதி தேர்வு செய்யப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முக்கோணத் தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியைப் பார்க்க திங்கட்கிழமை மெல்போர்ன் செல்வதற்கு முன் மும்பையில் இத் தகவலைத் தெரிவித்தார்.
இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி சென்னையில் மார்ச் 26 ஆம் திகதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் ஏப்ரல் 3 முதல் 17 ஆம் திகதி வரையிலும் மூன்றாவது போட்டி கான்பூரில் ஏப்ரல் 11 முதல் 15 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.
அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கான இடங்கள் ( பெங்களூர், நாகபூர், டில்லி, மொஹாலி) ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன.