இந்திய கிரிக்கெட் (ஐ.சி.எல்) நடத்தும் `ருவென்ரி- 20' சம்பியன்சிப் போட்டி 09 ஆம் திகதி தொடங்குகிறது.
கபில்தேவ் தலைமையிலான ஐ.சி.எல்.அமைப்பு சார்பில் ஏற்கனவே 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐ.சி.எல் சார்பில் 20 ஓவர் கிராண்ட் சம்பியன் சிப் போட்டி நடத்தப்படுகிறது.
எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தப் போட்டி ஐதராபாத், சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் சென்னை சுப்ப ஸ்டார்ஸ் , மும்பை சாம்ப்ஸ் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. பாகிஸ்தானிலிருந்து லாகூர் பாட்ஷா என்ற அணி பங்கேற்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோதும் . லீக் போட்டி முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். மொத்தம் 34 போட்டிகள் நடைபெறும். ஜீஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப் போட்டிக்கான 8 அணிகளின் கப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மும்பை சாம்ப்ஸ் அணிக்கு லாராவும், சென்னை சுப்ப ஸ்டார்ஸ் அணிக்கு ஸ்ருவேர்ட்லோவும் , கொல்கத்தா டைகர்ஸ் அணிக்கு கிரேக் மக்மிலனும், ஐதராபாத் ஹீரோஸ் அணிக்கு கிறிஸ் ஹரிஸும், டெல்லி ஜியன்ட்ஸ் அணிக்கு அத்தப்பத்துவும், சண்டிகர் லயன்ஸ் அணிக்கு கெய்ன்ஸும் அகமதாபாத் ரொக்கெட்ஸ் அணிக்கு டாமியன் மார்டினும், லாகூர் பாட்ஷாஸ் அணிக்கு இன்சமாமும் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.