Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
[06 - March - 2008] [Font Size - A - A - A]
* சிறப்புரிமை மீறல் பிரச்சினை எழுப்பினார் கஜேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னிப் பகுதிக்கு சென்று வருவதனை தடுப்பதன் மூலம் அங்கு அரச படைகளால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை மூடிமறைக்க அரசாங்கம் முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

ஓமந்தை, மதவாச்சி இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு படையினரால் தாம் இழிவாக நடத்தப்பட்டதாக பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினை எழுப்பிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ். தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய நான் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சியிலுள்ள எனது வீட்டிலிருந்து கொழும்பு வரும்வழியில் திங்கட்கிழமை அன்று ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தபோது இராணுவத்தின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்து எனது வாகனத்தின் கீழ்ப் பகுதி சோதனையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அச்சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் வைத்து வாகனத்தில் வந்தவர்களது அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் முழுமையான உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து பொருட்கள் அனைத்தும் துருவித்துருவி சோதனையிடப்பட்டு வாகனத்தின் முன் ஆசனப் பகுதி, பின் ஆசனப்பகுதி, பொருட்கள் ஏற்றும்பகுதி என்பனவும் வாகனத்தின் கூரைப்பகுதியும் துருவித்துருவி சோதனையிடப்பட்டதுடன், வெளிப்பகுதியும் சோதனையிடப்பட்ட பின்னர் ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியை தாண்டி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டேன்.

ஓமந்தையில் சோதனை நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது மதவாச்சி சோதனை நிலையத்தில் வழிமறித்த பொலிஸார் வாகனத்தை சோதனையிடும் பகுதிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அங்கு கொண்டு சென்ற போது வாகனத்தின் கீழ்ப்பகுதி சோதனையிடும் இடத்தில் வைத்து கீழ்ப்பகுதி சோதனையிடப்பட்டது. அதன்பின்னர் பொருட்கள் சோதனையிடும் பகுதிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அங்கு சென்றபோது எனது வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது என்றும் எனது வாகனத்தை மதவாச்சியை தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அதனை திருப்பி அனுப்பிவிட்டு பிறிதொரு வாகனத்தில் செல்லுமாறும் பொலிஸார் கூறினர்.

இவ்விடயம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை அடுத்து வாகனத்தை சோதனையிட்ட பின்னர் பயணம் செய்ய அனுமதிக்க முடியும் என்று கூறி சோதனையிடத் தொடங்கினர்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்திலிருந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு துருவித்துருவி சோதனையிட்டபின் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் வந்து மீண்டும் அதே பொருட்களை துருவித்துருவி சோதனையிட்டார். பின்னர் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தர் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஒன்றைக் கொண்டு வந்து வாகனத்தை சோதனையிட்டார்.

அதன் பின் ஒரு பொலிஸார் ஒரு மோப்பநாயை கொண்டுவந்து பொருட்கள் அனைத்தையும் மோப்பம் பிடிக்கச் செய்தார். பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எம்மை மிகவும் இழிவு படுத்தவேண்டும் என்பதற்காகவும், அச்சுறுத்துவதற்காகவும் வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

குறிப்பாக நாம் வன்னிப்பகுதிக்கு சென்றுவருவதனை தடுக்க வேண்டும். அதன் மூலம் அங்கு அரச படைகளாலும் விமானப் படையாலும் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினராலும் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை மூடி மறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். இது எமது சிறப்புரிமையை மீறும் செயற்பாடாகும். இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அவமதிப்பு நடவடிக்கைகளையும் கெடுபிடிகளையும் நிறுத்த உதவும் வண்ணம் வேண்டுகின்றேன்.

Email this page Your Opinion Print this page
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
முன்னாள் பிரதியமைச்சரை காணவில்லையென முறைப்பாடு
திருக்கேதீஸ்வரத்தில் இன்று இரவு வழிபாட்டில் கலந்துகொள்ள 300 பக்தர்களுக்கே அனுமதி
எழுவன்குளம் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
வட, கிழக்கு இந்து பக்தர்கள் இம்முறை சுதந்திரமாக அனுஷ்டிக்க வாய்ப்பு
இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் விடுபட அனைவரும் பிரார்த்திப்போம்மகா
தவசிக்குளம் ஐவர் கொலை வழக்கு 6 இராணுவத்தினர் கைதாகி காவலில்
நாகர்கோவில் பகுதியில் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சு
மடுக்கந்தையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் காயம்
காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்
ரூபவாஹினி நூலக உதவிப் பணிப்பாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயம்
104 படையினர், 80 பொதுமக்கள் ஒருமாதத்தில் பலி; 1021 பேர் காயம்
வாழைச்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
`உள்ளூராட்சி சபை தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'
சிறிலங்கன் எயார் லைன்ஸுடன் ஒப்பந்தம் முடிவடையும் விமானிகளுக்கு இந்திய விமான சேவைகளில் வேலை
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
ஈழத்தமிழரை படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்தின் தளபதியை இந்தியா அழைப்பதா?
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
தேர்தலுக்காக ஆயுதக் குழுவுடன் அரசு ஒப்பந்தம் செய்திருப்பது இலங்கைக்கு அவமதிப்பு
கச்சதீவில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் பலி
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் 175 தமிழ் பொலிஸார் நியமனம்
அவசர கால நீடிப்புக்கு 88 மேலதிக வாக்குகள்
முகத்துவாரம் குண்டுவெடிப்பு இரு ஆட்டோ சாரதிகள் கைது
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
அராலியில் இரு ஆலயங்களில் கொள்ளை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
ரயில் மோதி யுவதி பலி மற்றொருவர் படுகாயம்
3 எம்.பி.க்களுக்கு 3 மாத கால விடுமுறை
யாழ். குடாநாட்டில் கோதுமைச் செய்கை
தேசிய கொள்கையை உருவாக்கப் போவதாக ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்து அறிவிப்பு
புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்
டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புலிகளின் இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கிளைமோரில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் முஸ்லிம் மீடியாபோரம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பிக்குவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சி மாநாட்டில் அங்கத்துவம் வழங்குமாறு அகில இலங்கை தமிழர் கூட்டணி கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் திருப்பியனுப்பப்பட்ட 108 இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் இரு ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக விசாரணை
தேங்காய், முட்டை விலை அதிகரிப்புக்கும் உலக சந்தை நிலைவரமா காரணம்?
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
`இந்து ஆலய நிர்வாக கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது'
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com