Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
* எச்சரிக்கிறது ஜே.வி.பி

வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஆனந்த சங்கரி , சித்தார்த்தன் ஆகியோர் ஏங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. தனி ஆட்சியொன்றை அமைக்கப் போராடிய டக்ளஸுக்கும் தற்போதும் ஆயுதங்களை வைத்திருக்கும் புளொட் சித்தார்த்தனுக்கும் எப்படி முதலமைச்சர் பதவியை வழங்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

ஜே.வி.பி.யின் திஸ்ஸமஹாராம பிரதேச சபைத் தலைவர் எச்.எல்.விஜயசிறி தலைமையில் நடைபெற்ற 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது;

வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏங்கித்தவிக்கும் ஆனந்த சங்கரி, அமைச்சர் டக்ளஸ் , சித்தார்த்தன் ஆகியோர் சமஷ்டி முறையே சிறந்ததென்று கூறியதுடன் அதனை முன்னெடுத்துச் செல்ல முனைப்புடன் செயற்பட்டவர்கள் இவர்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதன் மூலம் வேறொரு பிரிவினைவாத சிந்தனையும் கருத்துகளும் ஏற்படப் போகின்றன.

கடந்த காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் நிலைமையின் விபரீதம் புரியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறொரு ஆட்சியை நிறுவுவதற்காக முனைந்த ஒருவர்.

சித்தார்த்தனின் புளொட் அமைப்பு இன்றும் கூட ஆயுதங்களை வைத்துள்ளார்கள். அவர்களின் முகாம்கள் வடக்கில் பல இடங்களிலும் இருக்கின்றன . இவ்வாறான நிலையில் வடக்கில் மாகாண சபையை நிறுவுவது தவறாகும்.

இந்த மாகாண சபை நிறுவப்பட்டால் ஆயுதம் வைத்துள்ளோரின் கரங்களை பலப்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

இன்றைய அரசாங்கம் வடக்கு, கிழக்கிற்கு வேறொரு ஆட்சியை வழங்க முயற்சிக்கின்றது. இதற்காகவே இந்த 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சமஷ்டி முறையிலான அரசையும் நிருவாகத்தையும் வழங்கப் போகின்றது. இதனை எவ்வாறு அனுமதிக்க முடியும்?

பாராளுமன்றத்துடன் மோதக்கூடிய பலம் வாய்ந்த மாகாண சபை ஒன்றையே வடக்கில் நிறுவி சமஷ்டி முறையை அமுல்படுத்த அரசாங்கம் வழிவகுக்கப் போகின்றதா?

இன்று எமது பகைவன் இந்தியாவாகும். இந்திய, இலங்கை கலை கலாசாரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தாலும் இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பி எமக்கு துரோகமிழைத்ததை எவ்வாறு மறக்க முடியும்?

இன்று நாடு முழுவதும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. அரச, தனியார் ஊழியர்கள் மாதாந்தம் தமக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்லலாம் என கவலையடைகின்றனர். எதை வாங்குவது எதைவிடுவது என்பதே பெரிய பிரச்சினையாகிவிட்டது.

இன்றைய அரசாங்கம் பலவீனமானது மட்டுமல்ல. பிரச்சினைகள் நிறைந்த அரசாங்கமாகும்.

Email this page Your Opinion Print this page
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
முன்னாள் பிரதியமைச்சரை காணவில்லையென முறைப்பாடு
திருக்கேதீஸ்வரத்தில் இன்று இரவு வழிபாட்டில் கலந்துகொள்ள 300 பக்தர்களுக்கே அனுமதி
எழுவன்குளம் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
வட, கிழக்கு இந்து பக்தர்கள் இம்முறை சுதந்திரமாக அனுஷ்டிக்க வாய்ப்பு
இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் விடுபட அனைவரும் பிரார்த்திப்போம்மகா
தவசிக்குளம் ஐவர் கொலை வழக்கு 6 இராணுவத்தினர் கைதாகி காவலில்
நாகர்கோவில் பகுதியில் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சு
மடுக்கந்தையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் காயம்
காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்
ரூபவாஹினி நூலக உதவிப் பணிப்பாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயம்
104 படையினர், 80 பொதுமக்கள் ஒருமாதத்தில் பலி; 1021 பேர் காயம்
வாழைச்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
`உள்ளூராட்சி சபை தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'
சிறிலங்கன் எயார் லைன்ஸுடன் ஒப்பந்தம் முடிவடையும் விமானிகளுக்கு இந்திய விமான சேவைகளில் வேலை
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
ஈழத்தமிழரை படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்தின் தளபதியை இந்தியா அழைப்பதா?
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
தேர்தலுக்காக ஆயுதக் குழுவுடன் அரசு ஒப்பந்தம் செய்திருப்பது இலங்கைக்கு அவமதிப்பு
கச்சதீவில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் பலி
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் 175 தமிழ் பொலிஸார் நியமனம்
அவசர கால நீடிப்புக்கு 88 மேலதிக வாக்குகள்
முகத்துவாரம் குண்டுவெடிப்பு இரு ஆட்டோ சாரதிகள் கைது
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
அராலியில் இரு ஆலயங்களில் கொள்ளை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
ரயில் மோதி யுவதி பலி மற்றொருவர் படுகாயம்
3 எம்.பி.க்களுக்கு 3 மாத கால விடுமுறை
யாழ். குடாநாட்டில் கோதுமைச் செய்கை
தேசிய கொள்கையை உருவாக்கப் போவதாக ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்து அறிவிப்பு
புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்
டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புலிகளின் இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கிளைமோரில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் முஸ்லிம் மீடியாபோரம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பிக்குவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சி மாநாட்டில் அங்கத்துவம் வழங்குமாறு அகில இலங்கை தமிழர் கூட்டணி கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் திருப்பியனுப்பப்பட்ட 108 இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் இரு ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக விசாரணை
தேங்காய், முட்டை விலை அதிகரிப்புக்கும் உலக சந்தை நிலைவரமா காரணம்?
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
`இந்து ஆலய நிர்வாக கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது'
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com