Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
ரொஷான் நாகலிங்கம்

ஆயுதக் குழுக்களின் பாதிப்புகளில்லாத சூழ் நிலையை மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு பவ்ரல் அமைப்பு தேர்தல் திணைக்களத்திடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடர்பாக இரண்டாவது அறிக்கையை நேற்று புதன்கிழமை வெளியிட்ட நீதி, நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் தலைவர் கிங்ஸிலி ரொட்றிக்கோ அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 6 அரசியல் கட்சிகளும், 22 சுயேட்சைக் குழுக்களும் 28 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களுள் 101 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக 21,70,471 வாக்காளர்கள் 285 வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்களிக்கவுள்ளனர்.

09 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய தபால் மூல வாக்குகளைப் பிரயோகிப்பதற்காக 1004 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் 934 பேர் அதற்குத் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 21,22 ஆகிய இரு தினங்களில் 72 மத்திய நிலையங்களில் வாக்குகளை அளித்தனர் என்பதுடன், 21 ஆம் திகதி காத்தான்குடி தேர்தல் தொகுதியில் ஹர்த்தாலொன்று அனுஷ்டிக்கப்பட்டதன் காரணமாக சிறு தடங்கலொன்று ஏற்பட்டபோதிலும், இவ்விரு தினங்களிலும் 93 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பானதாக இல்லாது விடினும் சிறு சிறு குழுநிலைக் கலந்துரையாடல்கள், துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் மூலம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காண முடிந்தது.

ஆயுதந் தாங்கிய குழுக்கள் அந்தப் பிரதேசங்களில் இன்னும் இயங்கி வருவதன் காரணமாகவும் அமைதியான ஒரு தேர்தல் இடம்பெறுவதற்குத் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற நியாயமான ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இத்தகைய சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு பவ்ரல் இயக்கம் 3 முக்கிய கோரிக்கைகளை நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைத்தது.

1.யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் வாக்கு மோசடி அல்லது முறைகேடு இடம் பெறின், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை எண்ணுவதை வெறுமையாக்கி மீண்டும் தேர்தலொன்றை நடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளரைப் பணிக்குமாறும்,

2. தேர்தல் காலத்துள் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை அல்லது பயன்படுத்துவதைத் தடுக்குமாறும்,

3. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் அரசாங்கத்தின் அல்லது அரச நிறுவனங்களின் சொத்துக்களைப் பயன்படுத்துமாயின், அதனைத் தடுப்பதற்கான செயன்முறைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைகளை முன்வைத்தது.

பவ்ரல் இயக்கம் வேட்புமனு கோரல் ஆரம்பித்தவுடன் மேற்கொண்ட கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை முன்வைக்கப்படுகின்றது. அத்துடன், குறிப்பாக அதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது. தேர்தல் தினத்திலும் சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்காக உள்ளூர் கண்காணிப்பாளர்கள் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சக உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தமது பிரதேசத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குள்ள உரிமையை நாம் ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு வாய்ப்புக் கிட்டும் இந்தத் தேர்தல் குறித்து பவ்ரல் இயக்கம் நன்நோக்கில் சிந்திக்கின்றது.

நீதியான ஒரு தேர்தலுக்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம், அரசாங்கம் உள்ளிட்ட தேர்தல் செயன்முறை சார்ந்த சகலரையும் நாம் கோருகின்றோம். குறிப்பாக, ஆயுதந் தாங்காத வாக்காளர்களுக்கு ஆயுதந் தாங்கிய குழுக்களின் பாதிப்புகள் இன்றி தமது வாக்குகளைப் பிரயோகிப்பதற்கு அவசியமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாம் கோருகின்றோம். அதேபோல், யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் முறைகேடொன்று இடம்பெறின் அந்த நிலையத்தின் வாக்களிப்பை இரத்துச் செய்து, புதியதொரு தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் வேண்டுகிறோம்.

Email this page Your Opinion Print this page
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
முன்னாள் பிரதியமைச்சரை காணவில்லையென முறைப்பாடு
திருக்கேதீஸ்வரத்தில் இன்று இரவு வழிபாட்டில் கலந்துகொள்ள 300 பக்தர்களுக்கே அனுமதி
எழுவன்குளம் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
வட, கிழக்கு இந்து பக்தர்கள் இம்முறை சுதந்திரமாக அனுஷ்டிக்க வாய்ப்பு
இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் விடுபட அனைவரும் பிரார்த்திப்போம்மகா
தவசிக்குளம் ஐவர் கொலை வழக்கு 6 இராணுவத்தினர் கைதாகி காவலில்
நாகர்கோவில் பகுதியில் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சு
மடுக்கந்தையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் காயம்
காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்
ரூபவாஹினி நூலக உதவிப் பணிப்பாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயம்
104 படையினர், 80 பொதுமக்கள் ஒருமாதத்தில் பலி; 1021 பேர் காயம்
வாழைச்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
`உள்ளூராட்சி சபை தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'
சிறிலங்கன் எயார் லைன்ஸுடன் ஒப்பந்தம் முடிவடையும் விமானிகளுக்கு இந்திய விமான சேவைகளில் வேலை
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
ஈழத்தமிழரை படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்தின் தளபதியை இந்தியா அழைப்பதா?
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
தேர்தலுக்காக ஆயுதக் குழுவுடன் அரசு ஒப்பந்தம் செய்திருப்பது இலங்கைக்கு அவமதிப்பு
கச்சதீவில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் பலி
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் 175 தமிழ் பொலிஸார் நியமனம்
அவசர கால நீடிப்புக்கு 88 மேலதிக வாக்குகள்
முகத்துவாரம் குண்டுவெடிப்பு இரு ஆட்டோ சாரதிகள் கைது
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
அராலியில் இரு ஆலயங்களில் கொள்ளை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
ரயில் மோதி யுவதி பலி மற்றொருவர் படுகாயம்
3 எம்.பி.க்களுக்கு 3 மாத கால விடுமுறை
யாழ். குடாநாட்டில் கோதுமைச் செய்கை
தேசிய கொள்கையை உருவாக்கப் போவதாக ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்து அறிவிப்பு
புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்
டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புலிகளின் இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கிளைமோரில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் முஸ்லிம் மீடியாபோரம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பிக்குவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சி மாநாட்டில் அங்கத்துவம் வழங்குமாறு அகில இலங்கை தமிழர் கூட்டணி கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் திருப்பியனுப்பப்பட்ட 108 இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் இரு ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக விசாரணை
தேங்காய், முட்டை விலை அதிகரிப்புக்கும் உலக சந்தை நிலைவரமா காரணம்?
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
`இந்து ஆலய நிர்வாக கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது'
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com