கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாத்தறைக்கு சென்ற இரு இளைஞர்கள் 5 இலட்சம் ரூபா ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் அகங்கொல என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை விபத்து சம்பவம் ஒன்றில் சிக்கிக் கொண்டதால் இருவரும் காயமடைந்தனர்.
இவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருவரும் அணிந்திருந்த உடைகளை பொலிஸார் கழற்றியபோது, உள்ளே போதைப்பொருள் பைக்கற்றுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவர்களின் உள் அங்கி, சப்பாத்துகள், முழங்காலுக்கு கீழ் நெஞ்சுப் பகுதி என்பனவற்றில் ஹெரோயின் பைக்கற்றுகள் காணப்பட்டன.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் கொழும்பில் இருந்து ஹெரோயினை வழியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்று வந்ததாகவும், மாத்தறைப் பகுதியில் மிகுதியை விற்க வந்தனர் எனவும் தெரியவந்தது.
வீதிச் சோதனைகளில் அடையாள அட்டைகளையும், வாகன அனுமதிப் பத்திரத்தையும் காண்பித்தும், தாம் ஒரு நிறுவன விற்பனை பிரதிநிதிகள் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
விபத்து இடம்பெற்றதால் இவர்களில் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட வண்டியதால் உடைகளை களைய வேண்டியதால் இந்த கடத்தல் நாடகம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புடன் பலப்பிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.