Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
டில்லியில் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதன் விளைவுகள்
[07 - March - 2008] [Font Size - A - A - A]
* கலாநிதி பாலசிங்கத்தின் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வில் நடேசன் விபரிப்பு

1980 களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கிளிநொச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரல் பாலசிங்கத்தின் "இரு இந்தியத் தலைவர்களும் விடுதலைப் புலிகளும்" மற்றும் `விடுதலை' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் பா.நடேசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு,

"இந்த விடுதலைப் போராட்டத்தில் தனது பங்களிப்பை பாலா அண்ணை பெரியளவில் செய்திருக்கின்றார். பாலா அண்ணை தொடர்பாக நாம் நிறைய கதைத்துக் கொண்டிருக்கலாம். எதிரிகள் பாலா அண்ணையை எவ்வாறு இல்லாது செய்யலாம், எவ்வாறு அவரைக் கொல்லலாம் என்று நீண்ட காலமாகவே அவர் இந்தியாவிலிருந்த காலத்திலிருந்து இறுதிக் காலம் வரை முயற்சித்தனர்.

இந்தியாவில் அவர் இருந்தபோது அவரது உயிரைப் பறிப்பதற்காக இலங்கை அரசாங்கம் குண்டு வைத்தது. அவர் இறுதிக் காலத்தில் நோய் வாய்ப்பட்ட காலத்தில் கூட அவர் வெளியில் சென்று சிகிச்சை பெறுவதற்குக் கூட இலங்கை அரசு அவரை அனுமதிக்கவில்லை.

நாம் இலங்கைக்கு எதிராகப் போராடும் நிலையில் அவர்கள் எப்படி நம்மை அனுமதிப்பார்கள் என்று நீங்கள் எண்ணலாம். உண்மையில் பல விடுதலைப் போராட்டக் களங்களில் இத்தகையதொரு மனிதாபிமானச் செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக்கின்றது.

பாலா அண்ணையின் உயிர் பறிக்கப்பட வேண்டுமென்பதிலும் அவர் இறக்க வேண்டுமென்பதிலும் அரசு மிகவும் தீவிரமாக இருந்தது. எங்களில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் பல சக்திகள், பாலா அண்ணையின் உயிரை எவ்வாறு பறிக்கலாம் அவரை எவ்வாறு சாகடிக்கலாம் என்பதில் தீவிரமாக இருந்தார்கள். இவையெல்லாம் அவர் எதிர்நோக்கிய ஆபத்துகள் மட்டுமே.

அவரின் இராஜதந்திர நடவடிக்கைகள் ஏராளம். ஒருநாள் முழுவதும் மட்டுமல்ல - நாட்கணக்கில் - மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் வகையிலான பல சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். எமது தலைவர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய பின்னர் நாம் சென்னையில் தங்கியிருந்தோம். அப்போது ஒருநாள், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். எங்களை அழைத்து "நீங்கள் டில்லிக்கு வர வேண்டும் அங்கே டில்லி அரசு உங்களோடு கதைக்க வேண்டுமாம்" என்று கூறினார்.

நானும் பாலா அண்ணையுடன் கூடவே அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் டில்லிக்கு சென்றிருந்தோம். டில்லியில் நாம் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது டில்லியில் உள்ள இராஜதந்திரிகள் மற்றும் உளவுத்துறையினர் எம்மைச் சந்தித்து ஒரு அரைகுறையான தீர்வுக்கு முதலில் போகும்படியும் அதிலிருந்து தொடர்ச்சியாகப் போகலாம் என்றும் கூறி எங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்து கொண்டிருந்தனர்.

அப்போது எம்.ஜி.ஆர். எங்களைத் தனியாக அழைத்து உரையாடும் போது, வடக்கும் - கிழக்கும் இணைந்திருந்தால் ஒரு முதலமைச்சர், வடக்கு வேறு கிழக்கு வேறாக இருந்தால் 2 முதலமைச்சர் என்று இந்திய அரசு எமக்குக் கூறியதாக தெரிவித்தார். இந்திய அரசு இப்படிச் சொல்வதற்கும் என்ன அர்த்தம் என்று எம்.ஜி.ஆர். எங்களிடம் கேட்டார்.

அதற்குப் பாலா அண்ணை, எம்.ஜி.ஆரிடம் இந்தியாவின் நயவஞ்சகமான சூழ்ச்சியை மிக இலகுவாக விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

எவ்வாறு திருச்சியையும் சென்னையையும் பிரிக்கலாம் எவ்வாறு தூத்துக்குடியையும் சேலத்தையும் பிரிக்கலாம். அப்படிப் பிரித்து கலெக்டர் (ஆட்சியர்) என்ற வேலையைச் செய்யச் சொல்வது தான் அதன் அர்த்தம் என்று விளங்கப்படுத்தினார்.

அத்துடன் மட்டுமல்ல - இந்திய மத்திய அரசு எவ்வாறு எங்களை ஒரு பொறிக்குள் வீழ்த்தப்போகிறது என்பதனையும் பாலா அண்ணா, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் விளக்கினார்.

அப்போது பாலா அண்ணை அளவளாவிய முறையைத்தான் குறிப்பிட வேண்டும். எமது தலைவர் மீது கொண்ட பாசம் - பற்றுக் காரணமாக "இப்படிச் செய்கின்றார்களே" என்று எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து உடனடியாகவே எங்களையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார்.

மேலும் "ஷ்ரீலங்கா அரசாங்கத்துடன் போராட உங்களுக்கு என்ன தேவை?" என்று எம்.ஜி.ஆர். எங்களைக் கேட்டார். எமது தலைவரின் அனுமதியோடு அப்போது பாலா அண்ணை பல வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தார். அதனை உடனே எம்.ஜி.ஆர். நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் - தமிழக சட்டசபையில் பல தீர்மானங்களையும் நிறைவேற்றினார்.

எமது தலைவர் தாயகத்திலிருந்து பல அரசியல் கோட்பாடுகளைக் கூறியபோது அதற்குத் தத்துவ வடிவம் கொடுத்து செயற்படுத்திய விதத்தை இதுவரை எந்த அரசியல் அறிஞரிடமும் நாம் கண்டதில்லை" என்றார்.

Email this page Your Opinion Print this page
பிரிட்டிஷ் அமைச்சரின் விமர்சனம் தவறு ஜெனீவாவில் அமைச்சர் சமரசிங்க கவலை
பிரச்சினையை பெருப்பித்து காட்டுவதாக இலங்கை விசனம்
கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
`கூட்டமைப்பு எம்.பி.க்களின் படுகொலைக்கான பொறுப்பை அரசு ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது'
புகழ்பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவின் பணி நிறுத்தம்
ரூபவாஹினி ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
முன்னாள் பிரதியமைச்சரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரம்
இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் தமிழக மீனவரின் வாழ்க்கை கேள்விக்குறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
13ஆவது திருத்தத்திலும் மேம்பட்ட தீர்வை முன்வைத்தால் இந்தியா வரவேற்கும்
பாதுகாப்புக்காக சார்க் உச்சிமாநாட்டை கொழும்பில்நடத்த அரசாங்கம் ஆராய்வு
உடரட்ட மெனிக்கேயில் வான் மோதி ஒருவர் பலி; இருவர் காயம்
சப்ரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விஷேட நடவடிக்கை
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை
13 ஆவது திருத்த அமுலாக்கம் இந்தியாவின் சூழ்ச்சியென இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி
தமிழர்களை இந்தியா கருணையோடு பார்ப்பதாக சிலர் மாயையில் உள்ளனர்
சர்வதேச சமூகத்திடம் இலங்கை எதனையும் மறைப்பதில்லை
புலிகளின் தலைவருக்கு காயமும் இல்லை நீரிழிவால் கால் அகற்றப்படவுமில்லை
போரில் பலியாகும் இராணுவத்தினர் குறித்த சரியான விபரம் தெரிவிக்கப்படுவதில்லை
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு?
டில்லியில் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதன் விளைவுகள்
சமயபுரத்தில் கொள்ளை முயற்சியின் போது கடத்தப்பட்டவர் புதன் இரவு விடுவிப்பு
வட,கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மாணவரின் எதிர்கால கல்வி நிலை கேள்விக்குறி
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன் குன்யா பரவும் அபாயம்; விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
வவுனியாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்ற மூவர் கைது
கம்பஹா மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாருக்கை நியமிக்க முடிவு?
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் வடகிழக்கில் எயிட்ஸ் தொற்றும் அபாயம் குறைவு
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யக் கோரி புத்தளத்தில் சத்தியாக்கிரகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கடத்திய போதைவஸ்து; விபத்தில் கண்டுபிடிப்பு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு திட்ட யோசனை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com