சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிணை உறுதிப்படுத்தும் முயற்சியாக வெடி குண்டுகள் மற்றும் நாசகாரச் செயல்கள் அவற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற விடயங்கள் அடங்கியதான செயன்முறைப் பயிற்சிகள் இப்பகுதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 கல்வி வலயங்களையும் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கு இவ்விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வப் பகுதி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை ஆளணியினரின் பங்களிப்புடன் குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் இப்பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இவற்றுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட குண்டுகள் உதிரிப்பாகங்களும் விடுதலைப் புலிகளால் இதுவரை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குண்டுவெடிப்பகள் அவற்றின் புகைப்படங்கள் அவை செயற்படுத்தபபட்ட முறைகள் என்பன தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளின் போது உயிர் உடைமைகளுக்குச் சேதங்கள் இன்றி தப்பித்துக் கொள்ளும் வழி முறைகள் தந்திரோபாயங்கள் என்பனவும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், இவ்வாறான நாசகார சம்பங்கள் இடம்பெறாமலிருப்பதற்கு முன்னோடியாக விழிப்பாக இருக்குமாறும் பாடசாலை சமூகங்களை ஒன்று திரட்டி விழிப்புடன் இருக்கும் மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் அதிகாரிகள் உணர்வு பூர்வமாக அறிவுறுத்தி வருகின்றனர்.