இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று நண்பகல் ஒரு மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.
ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்ந்தும் காடையர்களதும், குண்டர்களினதும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதைக் கண்டித்தும் ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாவதைக் கண்டித்துமே இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றிய அதேநேரம், கூட்டுத்தாபனத்தின் மிகப் பெரும்பாலான ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.நண்பகல் சுமார் ஒரு மணிநேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஊழியர்கள் தொடர்ந்தும் காடையர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றபோதும் அரசோ பொலிஸாரோ எதுவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் விசனம் தெரிவிக்கப்பட்டது.