இரு ஊடகவியலாளர்கள் உட்பட மூவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது;
இணையத்தளமொன்றின் ஆசிரியரான சசிதரன் என்பவரையும் அவரது மனைவியான வளர்மதியையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினமிரவு கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதி பகுதியில் வைத்தே சசிதரனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இத் தேடுதல் நடவடிக்கையின் போது மேற்படி இணையத்தள அலுவலகத்திலிருந்து முன்னர் வெளியான சரிநிகர் பத்திரிகைகளின் பெருந்தொகையான பிரதிகளையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு எடுத்துச் சென்றுள்ளதோடு அலுவலகத்துக்கும் சீல் வைத்துள்ளனர்.
இதேநேரம் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சசிதரனை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளரான திசநாயகம் என்பவரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, சசிதரனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தரவில் கல்கிஸை பொலிஸார் இரத்மலானையிலுள்ள சரிநிகர் பத்திரிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளருமான சிவகுமாரைத் தேடிச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் இல்லாமையால் அங்கிருந்த நிஷாந்தன் என்பவரைக் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதையடுத்து சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனந்ததேசப்பிரிய மற்றும் சட்டத்தரணிகளுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு சிவகுமார் சென்றபோது