Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது
[08 - March - 2008] [Font Size - A - A - A]
* `கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்'

`மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்கையாளர்களென இணையத்தளமொன்று நேற்று குறிப்பிட்டிருக்கிறது.

ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் சம்பந்தப்பட்ட விக்ரர் போட்டை பல வருடங்களாக சர்வதேச புலனாய்வுத் துறையினர் தேடிவந்தனர். தாய்லாந்து புலனாய்வு பிரிவினரும் பல மாதங்களாக தேடி வந்தபோதும் இறுதியில் நேற்று முன்தினம் 41 வயதான விக்ரர் போட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கொலம்பியாவிலுள்ள இடதுசாரி பார்க் போராளிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகளை கொள்வனவு செய்ய அவர் முயற்சித்ததாக இந்தத் தடவை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக ஆறு நாடுகள் வரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடும்.

ஐ.நா.வின் ஆயுதத் தடைகளை மீறி அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்ரர் போல் அமைப்பால் அவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க ஔடத அமுலாக்கல் நிர்வாகத்திடமிருந்து பெற்ற தகவலையடுத்து தாய்லாந்து நீதிமன்றம் விடுத்திருந்த பிடியாணையின் பிரகாரம் விக்ரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

்மற்றொரு நாட்டிற்கு அநேகமாக அமெரிக்காவுக்கு அவரை நாடுகடத்துவதற்கு முன்பாக அவருக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகின்றோம்ீ என்று தாய்லாந்து குற்ற ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த தளபதி மேஜர் ஜெனரல் பொங்பாட் சாயாபான் தெரிவித்திருக்கிறார்.

"அவரை பல மாதங்களாக தேடி வந்தோம். தாய்லாந்துக்கு அவர் இன்று தான் திரும்பி வந்தார் என்றும் பொங்பாட் சாயாபான் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் முடிவின் பின்னரான கதையே விக்ரர் போட்டின் கதையாகும். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்ட பின் தோற்றம் பெற்ற மூன்று விடயங்களினால் அனுகூலம் பெற்றவர் இந்த விக்ரர் போட். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டபோது இவருக்கு வயது 25. அச்சமயம் சோவியத் விமானப் படையின் விமானங்கள், பெருந்தொகை ஆயுதங்கள், உதிரிப்பாகங்கள் என்பன மலிவாக கிடைத்தன. மிகக் குறைந்த விலையில் படையிலிருந்து விலகியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களிடமிருந்து அவற்றை உலகில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அவர் விற்பனை செய்யத் தொடங்கினார்.

எந்தவொரு அரசாங்கமோ போராளிக் குழுக்களோ ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் விக்ரர் தனது அன்ரனோவ் சரக்கு விமானங்களில் ஆயுதங்களை நிரப்பிக் கொண்டு பறந்து செல்வார். திரும்பிவரும் போது வைரக்கற்கள் உட்பட பெறுமதியானவற்றுடன் திரும்பிச் செல்வார்.

அங்கோலா அரசாங்கமோ அல்லது யுனிற்ரா போராளிகளோ அல்லது ஆப்கனிலுள்ள வடக்கு கூட்டணியோ அல்லது அவர்களின் எதிரிகளான தலிபன்களோ யாராக இருந்தாலும் பணம் செலுத்தினால் அவர்களுக்கு மலிவான போக்குவரத்துக் கட்டணங்களுடன் ஆயுதங்களை வழங்கி வந்தார். 2001 இற்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கத்திற்காகவும் அதன் சிவில் விநியோகஸ்தர்களுக்காகவும் அவர்களின் சார்பில் ஈராக்கிற்கு கப்பலில் பொருட்களை ஏற்றிச் சென்று வழங்கினார்.

அமெரிக்காவுக்கு எவர் எதிரிகள் எவர் ஆதரவாளர் என்று உலகை அமெரிக்க ஜனாதிபதி பிரித்த போது விக்ரர் இரண்டு பக்கம் சார்ந்தவராக இருக்கிறார் என்று `மேர்ச்சன்ற் ஒவ் டெத்' `மரணத்தின் வியாபாரி' என்ற நூலின் கர்த்தாக்களான டக்ளஸ் பாரா, ஸ்ரீபன் பிரவுன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஐ.நா.வுக்கான சமாதானப் பணியாளர்களுடன் சோமாலியாவுக்கு அவர் சென்றிருக்கிறார். 2004 இல் கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்ட பின் இலங்கைக்கு உதவி வழங்குவதற்காகவும் வந்துள்ளார். அத்துடன் லைபீரியாவின் பெரும்படைத் தளபதி ஒருவருக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரர் போட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு முழுமையான வியாபாரியாகும். எந்தவொரு கொள்கையும் இல்லாமல் சர்வதேச ரீதியாக போக்குவரத்தை நடத்துபவர். உதவி வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுத்தவரை அனர்த்தங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு நிவாரணங்களை விநியோகிப்பதற்கு சிறந்த முறையில் உதவுபவராக கணிக்கப்படுகின்றார். ஆனால் பிரிட்டனின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெய்னைப் பொறுத்தவரை விக்ரர் ஒரு `மரண வியாபாரி' யாகும். ஆபிரிக்காவில் உள்நாட்டு யுத்தங்களை ஊக்குவிப்பவரென 2000 ஆம் ஆண்டு இவரைப் பற்றி பீற்றர் ஹெய்ன் சாடியிருந்தார்.

கற்பனைக் கதாபாத்திரங்கள் போன்றதே விக்ரரின் பாத்திரமுமாகும். அவர் தஜிகிஸ்தானில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் கஸ்பியன் கடலுக்கு சமீபமாகவுள்ள துர்மெனிஸ்தானை சேர்ந்தவரென விக்ரர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் உக்ரெய்னை சேர்ந்தவரென ஏனையோர் கூறுகின்றனர். அவரிடம் பல கடவுச் சீட்டுக்கள் உள்ளன. அவற்றில் அவரின் பெயர் பல்வேறு விதமாக உள்ளது. அவர் திருமணம் செய்திருப்பதுடன் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மொழிகளுக்கான மொஸ்கோவின் இராணுவ நிலையத்தில் அவர் கற்றுள்ளார். உஸ்பெக் தொடக்கம் பிரெஞ்சு, போர்த்துக்கல், ஆபிரிக்க மொழிகள் உட்பட பல மொழிகளை அவர் பேசும் ஆற்றல் உள்ளவர். ஆனால் ரஷ்ய உளவுப் பிரிவான கே.கி.பி.யில் தான் ஒருபோதும் இருந்ததில்லையென்று அவர் கூறியுள்ளார்.

`யார் பணம் செலுத்தினாலும் அவர் பறந்து வருவார்' எனவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்ரரின் சேவையை அமெரிக்கா பயன்படுத்தினாலும் அவரை சி.ஐ.ஏ. இலக்கு வைத்திருக்கிறது. அமெரிக்க திறைசேரி இவரின் சொத்துக்களை முடக்கியிருந்தது. லைபீரியாவில் பல கம்பனிகள் அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொஸ்கோவில் வீடு இருந்தாலும் உலகம் பூராவும் தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். இறுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுவிட்டார்.

Email this page Your Opinion Print this page
சென்னை - கொழும்புக்கு இன்று மகளிர் மட்டும் இயக்கும் விமானம்
சிவநேசன் படுகொலைக்கு அரசு கடும் கண்டனம்
ஜனநாயக மரபுகளுக்கு பாதிப்பு நோர்வே கண்டனம்
தேசிய ஊடக கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை பூர்த்தி அரசு அறிவிப்பு; தணிக்கை நோக்கம் அல்ல; அமைச்சர் யாப்பா
இலங்கைக்கு உதவியளிக்க தயாராக மத்தியஸ்தர் குழு
4 படையினர், 38 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
சிவநேசனின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ்.சிறில்
சிவநேசன் எம்.பி.க்கு `மாமனிதர்' விருது வழங்கி புலிகளின் தலைவர் பிரபாகரன் கௌரவிப்பு
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது
மகேஸ்வரன் கொலை தொடர்பாக ஹெகலியவிடம் வாக்குமூலம் பதிவு
`பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு'
நுரைச்சோலை, கொத்மலை மின் திட்டங்கள் அமைக்கப்படுமானால் மின் கட்டணம் உயராது
குருவிற்ற பகுதியில் 150 பேருக்கு சிக்குன்குன்யா
உள்ளூராட்சி தேர்தல் களத்தில் அமைச்சரின் கரங்கள் ஓங்கியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விசனம்
சிறைச்சாலையில் தாக்கப்பட்டு இறந்த கைதியின் மனைவிக்கு ரூபா 5 இலட்சம் நட்டஈடு வழங்க முடிவு
கல்கிசை பஸ் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி; மே 7 இல் விசாரணை
புதுவித காய்ச்சல் இரு குழந்தைகள் மரணம்
யாழ். மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக மருந்துகள் தட்டுப்பாடு, டாக்டர்கள் பற்றாக்குறை
மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
முகத்துவாரம் குண்டுவெடிப்பு விசாரணை மார்ச் 12 இல் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் பணிப்பு
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
முன்னாள் பிரதியமைச்சரை கண்டுபிடிக்க புத்தல காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல்
சிவநேசன் மறைவுக்கு ஈழவேந்தன் அனுதாபம்
கடற்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 26 நாடுகளுடன் இலங்கை உடன்படிக்கை
சிவநேசன் எம்.பி. படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
இரு ஊடகவியலாளர்கள் உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை தவறானது
கொம்பனித்தெரு பொலிஸாரால் குடும்பப் பெண்ணொருவர் கைது
காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சரை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசிரத்தை
சிவநேசன் எம்.பி.யின் படுகொலை ஜனநாயக சக்திகளை மீண்டும் கவலையடைய வைத்துள்ளது
விளம்பரமின்றி சமூகப்பணியை முன்னெடுக்கும் ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பு
ஜ.தொ.கா. தலைவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
சிவநேசன் எம்.பி.யின் அபிலாசைகள் விரைவில் எம்மால் வென்றெடுக்கப்படும்
பிலிமத்தலாவை வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
தனது எம்.பி.க்களையே படுகொலை செய்யும் உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையே
விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் தயாரிக்கப்பட்ட படகு கைப்பற்றப்பட்டது
ஜே.வி.பி.க்கே இல்லாத போது தமிழ் மக்கள் எவ்விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்?
ஆட்கடத்தல்களை பொலிஸாரே செய்வதாக சகல இன மக்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய துறைகளில் இலகுவாக தேர்ச்சி பெறலாம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com