யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சொலமன் எஸ்.சிறில் நியமிக்கப்படவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.கே.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடத்திற்கே சொலமன் எஸ்.சிறில் நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட சிறில் 25 ஆயிரத்து 928 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கொழும்பில் வைத்து முன்னாள் எம்.பி.ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு கடந்த பொதுத் தேர்தலில் 33 ஆயிரத்து 210 வாக்குகளைப் பெற்றிருந்த என்.சிறிகாந்தா எம்.பி.நியமிக்கப்பட்டார்.
சிறிகாந்த எம்.பி.க்கு அடுத்தபடியாக சிறிலும், அதற்கடுத்த படியாக சி.வி.கே.சிவஞானமும் வாக்குகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.