பெந்தோட்ட அந்துருவெல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்துருவ பகுதியில் மரணச் சடங்கொன்றில் கலந்து கொண்டு விட்டு அளுத்கம பகுதி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அந்துருவெல்ல பாலத்திற்கருகில் நடைபெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில் 8 மற்றும் 14 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
அளுத்கமவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியமையாலேயே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 20 பேர் கராப்பிட்டிய, பலப்பிட்டிய மற்றும் பெந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பெந்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வகின்றனர்.