Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வதேச மனிதாபிமான சட்டம் `தெரிவு' அல்ல; அவசியமான கடப்பாடு
[09 - March - 2008] [Font Size - A - A - A]
சர்வதேச மனிதாபிமானச் சட்டமானது தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விடயமல்ல. மாறாக சகல நாட்டு அரசாங்கங்களுக்குமுரிய கடப்பாடு இதுவாகும். இந்த சர்வதேச மனிதாபிமான சட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களையும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களையும் வெவ்வேறாக பிரித்துக் காட்டும் ஒன்றாகும் என்று பிரிட்டிஷ் துணைத் தூதுவர் லெஸ்லேகிரைக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உறவுகள், கேந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான கடல்வழிப் பாதுகாப்பு சேவைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான விரிவுரையின்போதே பிரிட்டிஷ் துணைத் தூதுவர் லெஸ்லே கிரைக் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமானச்சட்டம் எம்மை எவ்விதம் பாதிக்கின்றது என்பது குறித்து புரிந்துகொள்வதற்கு பிராந்திய மட்டத்திலான அனுபவங்கள் எதிர்கால நோக்கங்களை பகிர்ந்து கொள்வதும் அவசியமானது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஒரு வாரகாலம் இடம்பெறும் இந்தக் கருத்தரங்கிற்கு சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் அனுசரணை வழங்குவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரலாயம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மனித உரிமைகள் சட்டத்தின் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சர்வதேச மனிதாபிமானச் சட்ட விதிகளை கைக்கொள்வதை மேம்படுத்துதல் ஆகியவையே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.

Email this page Your Opinion Print this page
லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் மனவருத்தம்
சர்வதேச மனிதாபிமான சட்டம் `தெரிவு' அல்ல; அவசியமான கடப்பாடு
வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்
அந்துருவெல்ல வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
புலிகளின் பகுதிகளை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதல்
நாரந்தனை தம்பாட்டியில் சமூக சேவையாளர் சுட்டுக்கொலை
இந்தியாவை விமர்சிப்பதன் மூலம் ஜே.வி.பி. தவறிழைப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பசில்
படையினர், அதிகாரிகள், கண்காணிப்பாளர்களால் நிரம்பிவழிகிறது மட்டக்களப்பு மாவட்டம்
62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
ஜேர்மனில் சுற்றுலா கண்காட்சி பைஸர் முஸ்தபா பங்கேற்பு
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்
அக்கரைப்பற்றில் சுற்றிவளைத்து வீடுவீடாக தீவிர தேடுதல்
மலேசியா தேர்தல் அமைச்சர் சாமிவேலு தோல்வி
சிவநேசன் எம்.பி. மீதான படுகொலைச் சம்பவம் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம்
புத்தலவில் கிளைமோர் தாக்குதல் இராணுவ வீரர் பலி; இருவர் படுகாயம்
மன்னாரில் இரு நாள் மோதலில் 22 படையினர் பலி; 72 படையினர் காயம்
ஆசிரிய நியமனத்திற்கு போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய 61 பேர் மீது நடவடிக்கை
மலேசியாவில் கொல்லப்பட்ட வவுனியா வாசியின் சடலம் விமான மூலம் இலங்கைக்கு அனுப்பிவைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com