Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் மனவருத்தம்
[09 - March - 2008] [Font Size - A - A - A]
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதென எடுத்திருக்கும் தீர்மானத்தையிட்டு செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் கவலை தெரிவித்துள்ளார்.

தனது 4 வருட பணிக்காலம் முடிவடைந்ததும் பதவியை விட்டு விலகப் போவதாக நேற்று முன்தினம் லூயிஸ் ஆர்பர் உறுதிப்படுத்தியிருந்தார்.

`மனித உரிமைகளுக்காக அசாதரணமான முறையில் மிக ஊக்கத்துடனும் முயற்சியுடனும் தனித்துவமான விதத்திலும் லூயிஸ் ஆர்பர் குரல் கொடுத்து வந்தார். மனித உரிமை விவகாரங்களுக்கு ஐ.நா. அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அவரின் பணிகளினால் நான் மிகவும் கவரப்பட்டேன் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் பான் கீ மூன் இது தொடர்பாக விடுத்த அறிக்கையானது நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் பதவியிலிருந்து தான் விலகத் திட்டமிட்டிருப்பதாக ஆர்பர் அறிவித்திருந்தார். எதிர்வரும் ஜூனுடன் அவரின் பதவிக்காலம் பூர்த்தியடைகின்றது.

ஈராக் யுத்தம் தொடர்பாக புஷ்ஷின் நிர்வாகத்துடன் முரண்பட்டதையடுத்து லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. மரண தண்டனை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை புஷ் நிர்வாகத்துடன் முரண்பட்டது.

துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் நாடுகளின் தேசிய சட்டமுறைமைகளிலுள்ள குறைபாடுகள் பற்றியோ அரசாங்கங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புகள் மீதான விமர்சனங்களை முன்வைக்க லூயிஸ் ஆர்பர் ஒருபோதும் தயங்கியதில்லையென பான் கீ மூன் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையை ஆர்பர் உறுதியாக பின்பற்றியவரெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

லூயிஸ் ஆர்பர் விட்டுச் செல்வது ஐ.நா.வின் பரந்துபட்ட மனித உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வலுவூட்டுவதுடன் நீதி, பதிலளிக்கும் கடப்பாடு, மறுசீரமைக்கப்பட்ட பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் குடியியல் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் தொடர்பாக முழு அளவிலான பாரபட்சமற்ற அணுகு முறை என்பவற்றில் அவர் அதிகளவுக்கு கவனம் செலுத்தியவர் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் உயர் நீதிமன்ற நீதியரசரான லூயிஸ் ஆர்பர், முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா ஆகியவற்றுக்கான ஐ.நா.வின் போர்க்குற்ற நீதிமன்றங்களிலும் விசாரணையாளராகப் பணியாற்றியவராகும். 2004 இல் அவர் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் ஸ்தானிகராகப் பதவியேற்றார்.

தனது வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புடன் லூயிஸ் ஆர்பர், கடந்த வெள்ளிக்கிழமை தனது வருடாந்த இறுதி அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறார். மேற்கு தார்பூரிலும் இலங்கையிலும் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மோதல்களினால் ஏற்பட்டிருக்கும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை அந்த அறிக்கையில் அவர் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

காலத்துக்குக் காலம் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் மீளாய்வானது முதலாவதாக வளர்ச்சி குன்றிய நாடுகள் மத்தியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமைகள் பேரவைக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு ஜூனில் இடம்பெறவுள்ளது. அந்த அமர்வின் போது தனது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை தொடர்பாக ஆராய்வதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆர்பர் உறுதியளித்திருக்கின்றார்.

Email this page Your Opinion Print this page
லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் மனவருத்தம்
சர்வதேச மனிதாபிமான சட்டம் `தெரிவு' அல்ல; அவசியமான கடப்பாடு
வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்
அந்துருவெல்ல வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
புலிகளின் பகுதிகளை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதல்
நாரந்தனை தம்பாட்டியில் சமூக சேவையாளர் சுட்டுக்கொலை
இந்தியாவை விமர்சிப்பதன் மூலம் ஜே.வி.பி. தவறிழைப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பசில்
படையினர், அதிகாரிகள், கண்காணிப்பாளர்களால் நிரம்பிவழிகிறது மட்டக்களப்பு மாவட்டம்
62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
ஜேர்மனில் சுற்றுலா கண்காட்சி பைஸர் முஸ்தபா பங்கேற்பு
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்
அக்கரைப்பற்றில் சுற்றிவளைத்து வீடுவீடாக தீவிர தேடுதல்
மலேசியா தேர்தல் அமைச்சர் சாமிவேலு தோல்வி
சிவநேசன் எம்.பி. மீதான படுகொலைச் சம்பவம் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம்
புத்தலவில் கிளைமோர் தாக்குதல் இராணுவ வீரர் பலி; இருவர் படுகாயம்
மன்னாரில் இரு நாள் மோதலில் 22 படையினர் பலி; 72 படையினர் காயம்
ஆசிரிய நியமனத்திற்கு போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய 61 பேர் மீது நடவடிக்கை
மலேசியாவில் கொல்லப்பட்ட வவுனியா வாசியின் சடலம் விமான மூலம் இலங்கைக்கு அனுப்பிவைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com