Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ரஷ்ய விண்வெளி நிறுவனத்துக்கு எதிராக ஆடுமேய்ப்பவர் வழக்கு
[01 - April - 2008] [Font Size - A - A - A]
ரஷ்யாவின் பர்நவுல் பகுதியில் தனது வீட்டு முற்றத்தில் ரொக்கட் உதிரிப்பாகமொன்று விழுந்ததால் ரஷ்ய விண்வெளி நிறுவனத்திடம் நாற்பது இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார் ஆடு மேய்க்கும் ஒருவர்.

ரஷ்யாவின் அல்டாய் பிராந்தியத்தில் கிர்லிக் என்ற கிராமத்தில் வசிப்பவர் போரில் உர்மாதோவ். இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார்.

அவர் ஒருநாள் இரவு தனது குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த போது முற்றத்தில் ஏதோ ஒரு பொருள் பயங்கரமாக வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அவருக்கு இரவில் சரியாக கண் தெரியாது என்பதால் என்ன நடந்தது என்பதை உடனடியாகப் பார்க்க முடியவில்லை.

காலையில் எழுந்து பார்த்தபோது தனது குடிசையின் முன்புறத்தில் உலோகத்தினாலான ஒரு பெரிய பொருள் விழுந்து கிடப்பதைக் கண்டார். இருப்பினும் அந்தப் பொருள் விழுந்ததில் குடிசையின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்திருந்தது. விசாரித்த போது அது கஜகிஸ்தானில் உள்ள ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரொக்கெட்டின் பாகம் தான் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, ரொக்கெட் பாகம் விழுந்ததன் மூலம் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ் கோஸ்மாஸ் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். தனக்கு 40 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

உர்மாதோவ் வசிக்கும் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களும் `தங்கள் கிராமங்களில் அடிக்கடி ரொக்கெட் பாகங்கள் விழுவதாகவும் அப்படி விழும் பாகங்களில் சில மென்மையானவையாகவும் சில கடினமான உலோகங்களாகவும் உள்ளன. சில நேரங்களில் இன்ஜின் போன்ற கனமான பொருட்கள் விழுகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதுபற்றி சாஸ்கோஸ் நிறுவனம் கூறுகையில்;

நாங்கள் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தும் போது இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுப்போம். கடந்த 50 ஆண்டுகளில் 400 க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை செலுத்தியுள்ளோம். அதில் ஒரு சில ரொக்கெட்டின் பாகங்கள் மட்டுமே, மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துள்ளன' எனத் தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தான் பிரதமர் கிலானி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறது
ரஷ்ய விண்வெளி நிறுவனத்துக்கு எதிராக ஆடுமேய்ப்பவர் வழக்கு
முக்கிய தலைவர்களின் பிரசன்னமின்றி அரேபிய லீக்கின் உச்சி மாநாடு சிரியாவில் ஆரம்பம்
சிகை அலங்கரிப்பு தொழிலாளர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com