Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
* மத்திய மாகாண அமைச்சர் அருள்சாமி

மலையக சமூக அமைப்புகள் கலை, கலாசார விழுமியங்களைப் பின்பற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் மலையக சமூக மேம்பாட்டிற்காகவும் தங்களது பணிகளை விஸ்தரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் 18 ஆவது வருடாந்த கலாசாரப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான இரா. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அருள்சாமி தொடர்ந்து உரையாற்றுகையில் இப்பேரவை கடந்த 18 ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் இந்து கலாசாரத்தை பேணி பாதுகாத்து வருவதோடு பல மாணவர்களுக்கு புலமை பரிசில்களையும் வழங்கிவருகிறது. க.பொ.த. சாதாரணதர, உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கருத்தரங்குகளையும் இலவசமாக நடாத்திவருகின்றது.

இந்நாட்டில் மலையக சமுதாயம் தொடர்ந்தும் நாட்கூலிகளாக வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கக்கூடாது. ஏனைய சமூகங்களைப் போல சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்த சமுதாயமாக வாழ்வதற்கு இம்மாதிரியான பொது அமைப்புகள் செயற்பட வேண்டும்.

நுவரெலியா நகரில் இலைமறை காயாக இருந்த பல மாணவிகள் பரத நாட்டியத்தை முறையாக கற்று பல அரங்கேற்றங்கள் இம்மண்டபத்தில் நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் இந்தப் பரத நாட்டியத்தை ஒருசிலர் மாத்திரமே கற்றுவந்தார்கள். ஆனால், இன்று இந்நகரிலும் பலர் கற்று வருவதை நான் பாராட்டுகின்றேன். மலையக மக்கள் எதற்கும் சலித்தவர்கள் அல்ல அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கு இம்மாதிரியான அமைப்புகள் முன்வர வேண்டும். அவ்வாறு செயல்பட முன்வரும் அமைப்புகளுக்கு நான் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் என்ற ரீதியில் எனது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்றார்.

இக் கலாசார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அறிவிப்பாளர் போட்டிக்கும், பூக்கோலம், மாக்கோலப் போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த மாணவிகளும், அதனை கற்பித்த ஆசிரியர்களும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும், இவ்வைபவத்தில் நுவரெலியா பதில் நீதிவானும் சட்டத்தரணியுமான பி. இராஜதுரை, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். மோகன்ராஜ் பேரவையின் பொதுச் செயலாளர் எம். செல்லையா உட்பட பலர் உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com