Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
[01 - April - 2008] [Font Size - A - A - A]
*திருமலை கொலை வழக்கில் பொலிஸ் அதிகாரி சாட்சியம்

"நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்றுரவைகளைக் காணவில்லை. புற்தரையிலிருந்தே அவற்றை மீட்டேன். தற்போது வெற்றுத் தரையில் ரவைகள் கிடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாதென" திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

முன்னர் நடைபெற்ற விசாரணைகளின்போது புற்தரையில் இருந்தே ரவைகளை மீட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால், நேற்றைய விசாரணைகளின் போது இச்சம்பவத்தில் பலியான ஒருவரின் தந்தையான டாக்டர் காசிப்பிள்ளை மனோகரனால் சம்பவ இடத்தை காட்சிப்படுத்திய வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டபோது, அதில் வெறும் தரையிலேயே வெற்று ரவைகள் இருந்ததைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்போது திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தனது சாட்சியத்தில் மூன்றாவது நாளாக நேற்று தெரிவிக்கையில்;

நான் நான்காம் திகதி ஜனவரி 2006 அன்று தான் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருந்தேன்.

நான் செல்வதற்கு முன்னர் வேறு பொலிஸார் அவ்விடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நான் 1986 ஆம் ஆண்டு முதல் பொலநறுவை, கல்முனை, கந்தளாய், உகணை, அம்பாறை, பொத்துவில், திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளேன்.

ஆனால், பொத்துவில் உக்குரல்லை, திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையங்களிலேயே பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளேன்.

நான் துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து திருகோணமலையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், கடந்த 2007 திருகோணமலை சந்தையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் இச்சம்பவத்திலேயே இவ்வாறான இழப்பு நேரிட்டிருந்தது.

இந்த ஐந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக 12 விசேட அதிரடிப்படையினரும் 1 பொலிஸாரும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக எனக்குத் தெரியாது. பின்னர் எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட தொலைநகல் மூலமே அதனை அறிந்துகொண்டேன்.

இவர்கள் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் திருகோணமலை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனரெனத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com