Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
[01 - April - 2008] [Font Size - A - A - A]
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு இந்த நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றி அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொதுமக்கள் நல்லுறவுப் பிரிவு உயரதிகாரி ஐ.பி.கிரிஹாதெனிய தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு மட்டக்குளி கதிரானவத்தை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸ் உயரதிகாரி எஸ்.ஐ.பத்மலால் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடத்தியது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐ.பி.கிரிஹாதெனிய தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

இன்று நான் உண்மையிலே சுகயீனமுற்றநிலையில் எனது கடமைக்காக அலுவலகத்திற்கு சமுகமளிக்கவில்லை. இருப்பினும் இந்த பிரதேச வாழ்மக்கள் என் மேல் வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையை நான் வீண்படுத்த விரும்பவில்லை. ஆகவேதான் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நான் இங்கு வந்துள்ளேன்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு என்னிடமோ என் கடமை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடமோ உண்மையிலே கிடையவே கிடையாது. எமக்கு தேவை, எம் தாய்நாட்டின் மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதேயாகும். அதுவே எமது குறிக்கோளாகும்.

அடுத்ததாக நான் இந்த நிலையத்திற்கு வந்து 3 மாதம்தான் ஆகின்றது. எமது இந்த மூன்று மாதங்களில் நான் நிறைய உங்களுக்காக செய்துள்ளேன் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். தற்போது நாம் ஆரம்பித்திருக்கின்ற இந்த சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு எமது நாட்டில் எம் பெருமதிப்புக்குரிய ஜனாதிபதியும் பூரண சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்து உங்கள் ஆலோசனைப்படி 10 பேர் கொண்ட ஒரு சங்கத்தை உருவாக்கி தற்போது உங்களுக்கு நல்லதோர் தலைமையும் கிடைத்துள்ளது.

இது போன்ற சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒரு பேரணியை உருவாக்கியதற்கு காரணம் பொலிஸார் மட்டும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது எமக்கு பொது மக்களின் பங்களிப்பும் தேவையாகும்.

இந்த கதிரானவத்தையில் இருந்து முகத்துவாரம் பொலிஸுக்கு 10 கிலோ மீற்றர் உள்ளது. ஒரு சந்தேக நபரை அவசரமாக பிடிக்க முடியாது. அதற்கு பிரதேச மக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சந்தேக நபர் வந்தால் நாம் தேடி பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் எமக்கு அறிவித்து நாம் அதை செவிமடுக்காதிருந்தால் உண்மையிலே பொறுப்பதிகாரியான நாங்கள் நஷ்டஈடு கட்ட வேண்டியநிலை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த வாரங்களின் போது அளுத்மாவத்தையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன் எமது அதிகாரிகள் அதை சரியாக தேடிப் பார்த்திருந்தால் இன்று நாம் அந்த நிலைமைக்கு முகம் கொடுக்க தேவை இல்லை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஆயிரம் தேவைகள் இருக்கலாம் இருப்பினும் அவைகளை விட்டு விட்டு நாம் தற்போது சமுகமளிக்க காரணம், இந்த கூட்டம் எமக்கு தேவை. இன்று பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எமது பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என்று நம்பி வந்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

என் மதிப்பிற்குரிய தாய்மார்களே, சகோதர சகோதரிகளே எமது தேவை சந்தேக நபர்களோ, காடையர்களோ, திருடர்களோ எவையாயினும் சரி பரவாயில்லை. உடனே எமக்கு அடையாளம் காட்டுங்கள் அவர்களை நீங்கள் எமக்கு அடையாளம் காட்டாமல் அடைக்கலம் கொடுத்தால், அது உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியதாயிருக்கும். அப்படிபோன்றவர்களை உடனடியாக நாம் ஒரங்கட்ட வேண்டும்.

எமது முகத்துவாரம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன இந்த நிலையத்திற்கு வந்த பின் இங்குள்ள மக்களுக்கு நிறைய சேவைகள் செய்துள்ளார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவரின் வேண்டுகோள் என்னவென்றால், நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலையையும் ஒழுங்காக செய்ய வேண்டும். அது ஒவ்வவொருவருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். அது எமது நிலையத்திற்கு மிக நீண்ட பெறுமதியை உண்டாக்கும் என்பதே அவரின் அறிவுரையாகும்.

நான் சுருக்கமாக கூறுகையில், களனி ஆற்றை எடுத்துக் கொள்வோம். அதில் வழிந்தோடிய நீரின் மணலை எடுத்தாலும் கற்களை எடுத்தாலும் அதிர் தண்ணீர் குறையப் போவதில்லை. அதுபாட்டில் அந்ந நீர் கடலுக்கு போய் சேரும். அதே போல்தான் பொலிஸாராகிய எமக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாம் எந்த நேரமும் மக்களாகிய உங்களுடன் இருப்போம் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நாட்டில் வாழும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எமது நாடு. இது எமது மக்கள் என்று வாழ்ந்தால் எந்த விதமான பிரச்சினை வந்தாலும் எமக்கு அது தூசியாய் மாறிவிடும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தாய் மக்கள் என்று நினைத்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com