Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
[01 - April - 2008] [Font Size - A - A - A]
நாட்டின் சில பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் உட்பட நேற்று முடிவடைந்த 24 மணிநேரத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொலைசெய்யப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பாணந்துறை குறுக்கமுல்ல பகுதியிலுள்ள விகாரைக்கு சமீபமாக ஒருவர் நேற்று முன்தினம் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம லிதேகம பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவர் 18 கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவர் ஆயுதங்களை ஒழித்து வைத்துள்ளதாகக் கூறிய இடத்திற்கு கூட்டிச் சென்றபோதே அவர் தப்பிக்க முற்பட்டபோது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக மேல்மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண தெரிவித்தார்.

இதேவேளை, பலியான சந்தேக நபர் 27 வயது மதிக்கத்தக்கவர் எனப் பொலிஸார் தெரிவித்ததுடன், ஒழித்து வைத்த இடத்தில் ரி-56 ரகதுப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அநுராதபுர - குருநாகல் பிரதான வீதியில் கல்கமுவ பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இச்சடலம் இனம் காணப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இச்சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலேவெல, பலகமுவ பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இச்சடலம் இனம்காணப்படவில்லை. சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் நேற்று முன்தினம் நாத்தாண்டியாவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com