Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
*அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

கோவர்தனியை அக்ஷன் பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவலையடைந்திருக்கவில்லையென அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியமளித்த ஒருவர் கூறினார்.

கடந்த 2006 ஆகஸ்ட் மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றபோது, வழக்கிய சாட்சியத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கனகரத்தினம் கோவர்த்தனியின் சார்பாக சாட்சியம் வழங்கிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

கோவர்த்தனி திருகோணமலையிலேயேதான் வசித்து வந்தார். ஆனால், சிலவேளைகளில் மூதூரிலேயே தங்கிவிடுவார்.

வழமையில் அவர்களது அலுவலக வாகனத்தில்தான் கடமைக்குச் செல்வார்.

2006 ஆகஸ்ட் முதலாம் திகதியும் திருகோணமலையில் இருந்துதான் வேலைக்குச் சென்றார்.

இவர் கையடக்கத் தொலைபேசி ஒன்றையே வழமையில் பயன்படுத்துவார். சிலவேளைகளில் தமது அலுவலகத்திலிருந்தும் அழைப்புகளை மேற்கொள்வதும் உண்டு.

நான் கோவர்த்தனியுடன் கதைப்பதைவிட அவரது தந்தையுடனேயே அடிக்கடி தொலைபேசியில் கதைத்துக் கொள்வேன். சிலவேளைகளில் கோவர்த்தனியுடனும் கதைத்ததுண்டு.

2006 ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊடகங்கள் மூலம் அக்ஷன்பாமின் பணியாளர்கள் பதினேழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை நான் தெரிந்து கொண்டேன்.

இதேவேளை, அவர் கடமைக்குச் சென்றுள்ளார் என்பதை அவரது தந்தை கூறியே நான் அறிந்து கொண்டேன்.

மேலும் மூதூர் பிரதேசத்தில் பிரச்சினை ஆரம்பித்திருந்ததனையும் ஊடகங்கள் மூலம் நான் அறிந்திருந்தும், கோவர்த்தனியை அந்நிறுவன அதிகாரிகளே பாதுகாப்பாக கொண்டு வருவார்கள் என்ற எண்ணத்தால் அவரின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை.

ஆகஸ்ட் நான்காம் திகதி அதிகாலையில் தனது சகோதரியுடன் அவர் கதைத்ததாக பின்னர் கேள்விப்பட்டேன்.

அப்போது மூதூரில் பிரச்சினை தீவிரமடைந்திருப்பதாக கோவர்த்தனி கூறியதாக சகோதரி தெரிவித்திருந்தார்.

ஆனால் தனது சகோதரிக்கு கோவர்த்தனி தனது கைத்தொலைபேசி மூலமே அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் மூலம் நாம் அறிந்தோம்.

திருகோணமலை வைத்தியசாலைக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எடுத்து வரப்பட்ட பின்னர் அடையாளம் காண்பதற்காக நான் நீதிவானால் எட்டாம் திகதி ஆகஸ்ட் 2006 இல் அழைக்கப்பட்டேன்.

உடலைப் பார்த்தபோது சிதைந்த நிலையில் இருந்தது. அவரின் முகத்தை ஓரளவு பார்க்க கூடியதாக இருந்தது. அத்துடன், அவரது கால் சிறிய விரல் ஏனைய விரல்களை விட நீண்டிருக்கும் அதனையும் வைத்து உடலை அடையாளம் காட்டினேன்.

இதன்போது என்னிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. நான் தமிழிலேயே வாக்கு மூலம் வழங்கினேன். ஆனால், அவர்கள் எம்மொழியில் பதிவு செய்தார்களென்று தெரியாது.

மேலும் எனது வாக்கு மூலம் எனக்கு வாசித்துக் காட்டப்படவும் இல்லை. நான் வாசிக்கவும் இல்லை.

இந்நிலையிலேயே அவ்வாக்குமூலத்தில் எனது வழமையான கையொப்பத்தை இட்டேன். ஆனால் நான் வாக்குமூலம் கூறும்போது ஒருவர் சிங்களத்தால் மொழிபெயர்த்துக் கூறினார்.

மீண்டும் உடல் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டபோதும் என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் உடல் அடையாளம் காட்ட முடியாதபடி சிதைவடைந்திருந்தது.

கடந்த மாசி 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எனது சாட்சியம் தமிழில் பதிவு செய்யப்பட்டு எனக்கு வாசித்துக் காட்டப்பட்டது.

இவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மூதூரில் துப்பாக்கி மற்றும் ஷெல் சத்தங்கள் கேட்டன.

அத்துடன் ஏராளமான மக்கள் மூதூர் நகரிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். ஆனால் மக்களை எந்தவொரு அமைப்பும் இடம்பெயரச் சொல்லி அறிவித்தல் விடுத்ததாக நான் அறியவில்லை.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் எவரையும் சந்தித்து நான் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும் இல்லையெனத் தெரிவித்தார்.

இதேவேளை, இவரின் மரணத்துக்கு அரசோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ, எந்தவொரு அமைப்போ நஷ்ட ஈடு ஏதாவது வழங்கினார்களா என குறுக்கு விசாரணை செய்தபோது சாட்சி இல்லையெனப் பதிலளித்தார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com