Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
[01 - April - 2008] [Font Size - A - A - A]
பண்டாரவளை டயரபா பெருந்தோட்ட "கிறின்ஹில்" பிரிவில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகளை உடன் பூர்த்தி செய்து கொள்ளும்வகையில், ஊவா மாகாணசபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார். தமது நிதியில் ஐம்பதாயிரம் ரூபாவினை வழங்கியுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கைக்குழந்தைகளுக்கு பால்மா வகைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பண்டாரவளையில் கடந்த 30 ஆம் திகதி மாலை பலத்த மழையுடன் சூறாவளிக் காற்று வீசியதால் டயரா பெருந்தோட்ட "கிறின்ஹில்" பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களது 13 தனிவீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. தொடர்ந்தும் பலத்த மழை பெய்ததினால் தொழிலாளர்களின் பல இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் சேதமடைந்தன.

இவ் அனர்த்தத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தோட்ட ஆலயத்திலும், பொது மண்டபமொன்றிலும் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், டயரபா தோட்ட வைத்தியசாலை மண்டபத்தில், நேற்று 31 ஆம் திகதி வெலிமடை பிரதேச செயலாளர் டபிள்யு.எம்.குணவர்தன தலைமையில் அவசர கூட்டமொன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தொழிலாளர்கள் சார்பில் ஊவா மாகாண சபையின் மலையகமக்கள் முன்னணி உறுப்பினர் அ.அரவிந்குமார், டயரபா தோட்டமுகாமையாளர் நிசாந்த ரன்தெனிய உள்ளிட்ட தோட்ட நிர்வாகிகள், கள உத்தியோகத்தர்கள், தோட்டமட்டத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான மீள் கட்டமைப்பு வசதிகளை, உடன் ஏற்படுத்திக் கொடுக்குமுகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இரவு முதல் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுவகைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்களை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை "டிரஸ்ட்" நிறுவனம் மூலம் மேற்கொள்வதென்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் தொடர்பு கொள்வதென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com