Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. தெரிவிப்புரொஷான் நாகலிங்கம்

முஸ்லிம் காங்கிரஸுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இணக்கப்பாடு எட்டாதவிடத்து நாம் ஏற்கனவே தயாரித்திருந்த வேட்பாளர் பட்டியலின் படி வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

இந்த அரசு பதவியேற்றது முதல் இன்று வரை அரிசி 136 சதவீதத்தாலும் கோதுமை மா 230 சதவீதத்தாலும் டீசல் மற்றும் பெற்றோல் என்பன 150, 149 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளது. அதுபோல், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்வடைந்து, மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்த முடியாது பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

அதேபோல், நாட்டில் நடமாடும் மர்மமான வெள்ளை வானினால் ஆட்கள் கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். இதன் காரணமாக பயத்தின் நிமித்தம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமன்றி, ஊடகவியலாளர் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாதவாறு தாக்கப்படுகின்றனர், வெட்டப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத இந்த அரசு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்கின்றது.

இதனைக் கண்டித்து எமது கட்சி நாளை புதன் கிழமை முற்பகல் 10 மணிக்கு 120 நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. எனவே, அரசுக்கு தமது எதிர்ப்பை மக்கள் காட்டுவதற்கு எம்முடன் இணையுமாறு கோருகின்றோம்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஜயசேகர ஓய்வுபெற்றுள்ள நிலையில், இப்பதவிக்கு தம்மிக்க கித்துல்கொடவை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணானது. தமது நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நியமனத்தை எமது கட்சி எதிர்க்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவை இன்று (நேற்று) இரவு எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையின் பின்னர் எடுக்கவுள்ளோம். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இறுதித் தினம் புதன்கிழமையாகும். அவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்படாதவிடத்தும் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் நாளை புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் மேற்கொள்ளவுள்ளோம்.

கிழக்கில் எமது கட்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர். அம்பாறையில் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதியாகையால் நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு முதலமைச்சரை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும்.

புலிகளுக்கு ஆதரவானவர்களை வேட்பாளர் பட்டியலில் எமது கட்சி சேர்த்துள்ளதாக அரசாங்கம் எம்மீது சேறு பூசுகின்றது. தமிழர்கள் எல்லோரும் புலிகளாவெனக் கேட்கின்றோம். தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் மூலம் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற நிலையில், இவர்கள் ஏன் மாகாண சபை உறுப்பினர்களாக இருக்கக்கூடாதென நான் கேட்கின்றேன்.

இதேநேரம், ஐ.தே.க.வுக்கு கிழக்கில் வெற்றிபெற முடியாதெனவும் அரசு கூறுகின்றது. அங்கு நீதியான, சுதந்திரமான ஜனநாயக முறையிலான தேர்தல் அங்கு இடம்பெறுமாயின் அங்கு நாமே வெற்றிபெறுவோம். கிழக்கில் 22 வருடம் சேவையாற்றிய அதிரடிப்படையினரை அரசாங்கம் ஏன் வாபஸ்பெறுகின்றது. அவர்கள் அங்கு பரீட்சயம் உள்ளவர்கள். அங்கு ஆயுதக் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கே இதனை அரசு மேற்கொள்கின்றது.

நான் ஐ.தே.க.வில் எனது பல்கலைக்கழக காலம் முதல் இணைந்து செயற்பட்டு வருகின்றேன். எமது கட்சிக்குள் முரண்பாடு இல்லையென்பதுடன் கட்சிக்கு விரோதமாக சுகபோகங்களுக்காக நான் ஒருபோதும் கட்சி தாவப்போவதில்லை. இது குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நான் மேற்கொண்டதில்லையென ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com