Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
[01 - April - 2008] [Font Size - A - A - A]
தற்கொலைக் குண்டு தாரிகள் அதிகாரிகளிடம் சரணடைந்தால் 1 கோடி ரூபாவும் வெளிநாட்டில் புதுவாழ்வும் அளிக்கப்படுமென அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவரொட்டிகள் சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

உங்கள் வாழ்வும் இளமையும் இலங்கைக்கு தேவைப்படுகிறது. இதனை நீங்கள் ஏன் பிரபாகரனுக்கு கொடுக்கிறீர்கள் என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதுடன் துண்டாடப்பட்ட தலையின் புகைப்படமும் அதில் காணப்படுகிறது.

தற்கொலைதாரிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக நாம் கருதுகிறோம். அவர்கள் வாழ்வதற்கு உரிமை உடையவர்கள் தங்களைத் தாமே கொல்வதற்கு அல்ல என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

இருவாரங்களுக்கு முன்னரே சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு அரசாங்கம் பொறுப்பென்பதை முதலில் அதிகாரிகள் மறுத்திருந்தனர். இவைதொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகளும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் இதன் பின்னணியில் தாங்கள் இருப்பதாக நேற்று திங்கட்கிழமை அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேநேரம் சரணடைவோருக்கு பணத்திற்கு அப்பால் மன்னிப்பும் புனர்வாழ்வும் தொழில்வாய்ப்பும் வழங்கப்படுமென ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

ஆனால் இதற்கான பணத்தை அரசு எவ்விதம் பெற்றுக் கொள்ளும் என்றோ இதனைப் பெற்றுக்கொள்ளும் தகைமை எப்படி தீர்மானிக்கப்படும் எனவோ அமைச்சர் விபரிக்கவில்லை.

அதேசமயம் எவரும் இதுவரை சரணடைவது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லையென ஹெகலிய கூறியுள்ளார்.

மேலும் வட போர்முனையிலுள்ள படையினர் சிக்குன்குன்யா, டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

கடுமையான மழைகாரணமாக இராணுவத்தினர் தமது திட்டத்தில் சிலவற்றை மாற்றிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டதாக அமைச்சர் ஹெகலிய கூறியிருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com