கொழும்பு- 15 முகத்துவாரம் பொலிஸ்- பொதுமக்கள் நட்புறவுக் குழுவும் கதிரானவத்தை மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை கதிரானவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது சிவில் குழுத் தலைவர் ரோகித பெரேரா மங்கள விளக்கேற்றுவதையும் மதத் தலைவர்களின் ஆசியுரையையும் முகத்துவாரம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் இரிஹா தெனிய மற்றும் சப்இன்ஸ்பெக்டர் பத்மலால் ஆகியோர் உரையாற்றுவதையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
கண்டி மாவட்ட அமைப்பாளராக கே.பி. கோவிந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக்கடிதத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோவிந்தராஜாவிடம் வழங்குவதைக் காணலாம்.