கிண்ணியா ஆலங்கேணி பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் ஒன்றில் ஊர்காவல் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலங்கேணி பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த முஹமட் ஹனிபா முஹமட் அனீஸ் (வயது 26) என்ற ஊர்காவல்படை வீரரே கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பாக உடனடியாக அறிய முடியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.