Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
[10 - April - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன குற்றச்சாட்டு

இராணுவ ரீதியில் முக்கியமற்ற மடுப்பிரதேசத்தை கைப்பற்ற முக்கியத்துவம் வழங்கப்படுவது குறித்து இராணுவத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன போரில் கொல்லப்படும் இப்படையினர் பற்றி பிரதமர் வெளியிடும் தரவுகளை தம்மால் ஏற்கமுடியாதெனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகால சட்டப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மாதம் 93 முப்படையினரே கொல்லப்பட்டதாக பிரதமர் கூறினாலும் 121 இராணுவத்தினர் கடந்தமாதம் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் பெயர், விலாசங்கள் எம்மிடமுள்ளன. எனவே இச்சபையில் பிரதமர் தரும் தரவுகளை எம்மால் ஏற்கமுடியாது.

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் ஒருவர் மலர்வளையத்தை இச்சபைக்கு கொண்டு வந்த பின்னரே 6 எம்.பி.க்கள் பரிதாபகரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மலர் வளையம் சபைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இந்நாடு சாபக்கேட்டினால் பீடிக்கப்பட்டது.

மகேஸ்வரன் எம்.பி.யை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியும். ஆனால் அரசாங்கம் இதனை மறுத்து பொலிஸ்மா அதிபர் புலிகளே மகேஸ்வரனை படுகொலை செய்தனர் என்றார்.

மடு ஆலயம் பழமை வாய்ந்தது. இப்பிரதேசம் இராணுவ ரீதியில் முக்கிய மற்றது. எனினும் இத்தேவாலயத்தை கைப்பற்ற ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி இராணுவத்தினரிடையே எழுந்துள்ளது. அரசியல் இலாபத்திற்கே மடுமீதான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இராணுவத்திற்கு ஒரு பக்கம் ஆட்சேர்த்தாலும் மறுபக்கம் பலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடவும் காத்திருக்கின்றனர்.

இராணுவத்திற்கு தவறான உத்தரவுகள் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் திறமை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் உயிரிழப்புகளும் பெருகியுள்ளது. நாம் கூறுவது பிழையென்றால் இராணுவ தளபதிகள் இதுபற்றி எமக்கு விளக்கமளிக்கலாம்.

பிள்ளையானின் தேவைக்காக கிழக்கில் விசேட அதிரடிப்படை முகாம்கள் அகற்ப்பட்டுள்ளது. மிகவிரைவில் பிள்ளையான் புல்லுரிவியாக மாறுவார். இதனை பொறுத்திருந்து பாருங்கள். அவர் கிழக்கில் பாரிய இராணுவ முகாம்களை அமைத்து வருகிறார். இது பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும்.

இச்சபையில் இருக்க வேண்டியவர் அமைச்சர் ஜெயராஜ். அவரின் வெற்றிடத்தை ஆளும்தரப்பு எவரினாலும் ஒருபோதும் நிரப்பமுடியாது.

ஜெயராஜின் படுகொலையின் பின்னர் மதவாச்சி பாதையை மூடினாலும் ஒருபலனும் கிட்டவில்லை. அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டிலுள்ள குறைபாட்டையே இது வெளிக்காட்டுகிறது.

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com