கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு சித்திரைப் புத்தாண்டு தினத்தின்போது அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இம்முறை கூடியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலங்களில் கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களால் கதிர்காமத்துக்கு உல்லாசப் பயணிகளும் , பக்தர்களும் வருவது குறைந்திருந்ததுடன் இங்குள்ள விடுதிகளும் மூடப்பட்டன.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இப்பகுதியில் இல்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார் கதிர்காமம் வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கதிர்காமத்துக்கு தற்போது பொதுமக்கள் மெல்ல மெல்ல வரத்தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.