யால தேசிய வனப்பிரதேசத்தினுள் செவ்வாய்கிழமை சென்ற இருவரைக் காணவில்லை என சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரில் அதனைப் பார்வையிடச் சென்றபோது துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டதாகவும் அந்த மூவரில் தப்பி வந்தவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
ஏனைய இருவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.