முந்தல் பரலங்கட்டு பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை வெள்ளைவானில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் நேற்று பிற்பகல் புத்தளம் மதுரங்குளி பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை இவரது வீட்டிற்கு வெள்ளை வானொன்றில் வந்த நான்கு ஆயுதபாணிகள் இவரைக்கடத்திச்சென்றனர்.
எனினும் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கடத்தல்காரர்கள் இவரது கண்களைக்கட்டி வானில் ஏற்றி வந்து மதுரங்குளி 10 ஆம் கட்டையில் மக்கள் நடமாட்டமற்ற இடத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
அவ் வழியால் வந்த வாகனமொன்றை மறித்த இவர் அதிலேறி வந்து முந்தல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான எம்.ஏ.பீற்றர் வில்பிரட் (வயது 59) என்பவரே கடத்தப்பட்ட பின் விடுவிக்கப்பட்டவராவார்.