Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
[10 - April - 2008] [Font Size - A - A - A]
* உயிருக்கு அச்சுறுத்தலென சபையில் முறையீடு

வத்தளையிலுள்ள தனது வீட்டுக்குள் 8 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த முகத்தை மூடிமறைத்த ஆயுதபாணிகள் வீட்டின் பல இடங்களில் குழிகளை தோண்டி சோதனை நடத்தியதுடன் தேடுதல்களையும் நடத்தியுள்ளமையால் தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சிறப்புரிமைமீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கடந்த 8 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் வத்தளையிலுள்ள எனது வீட்டினுள் 5,6 ஆயுததாரிகள் தமது முகங்களை மூடி மறைத்தவாறு அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த எனது வீட்டுப் பராமரிப்பாளரான ஜெயாஸ்பரன் அவர்களை யாரென விசாரித்தபோது அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று அறையொன்றினுள் வைத்து பூட்டிவிட்டு ஒரு ஆயுததாரியை காவலுக்கு நிறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் எனது வீட்டின் வளவினுள் பல இடங்களில் குழிகளைத் தோண்டி தேடுதல்களை நடத்தியுள்ளனர். 20 நிமிடங்கள் வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் முடிந்த பின்னர் எனது வீட்டுப் பராமரிப்பாளர் நீங்கள் யாரென மீண்டும் கேட்டபோது தாம் சி.ஐ.டி. யினர் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அதிகாலை 3.48 மணியளவில் வந்த பொலிஸார் தோண்டியிருந்த குழிகளை பார்வையிட்ட பின்னர் வீட்டு பராமரிப்பாளர் ஜெயாஸ்பரனை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலங்களைப் பெற்றபின்னர் விடுவித்தனர்.

இந்நடவடிக்கையால் எனக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எமது கட்சி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோவென அச்சமடைகிறேன். வீட்டு வளவினுள் குழிகளை தோண்டியவர்கள் சிலவேளைகளில் குண்டுகளை புதைத்துவிட்டு சென்றிருக்கலாமெனவும் சந்தேகமடைகிறேன்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபருக்கும் பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளேன். அத்துடன், எனது வத்தளையிலுள்ள வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்புத் தர வேண்டுமெனவும் வேண்டுகிறேன்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இச்சம்பவம் குறித்து நான் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அவர் இது தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com