Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
[10 - April - 2008] [Font Size - A - A - A]
* சபையில் பிரதமர் விக்கிரமநாயக்க

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முன்னோடியாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே செயற்பட்டதாலேயே புலிகள் அவரை படுகொலை செய்ததாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;

"பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் புலிகளுக்கெதிராக குரல் எழுப்பிய ஜெயராஜை புலிகளால் கொலைசெய்ய முடிந்தமையையிட்டு நாம் கவலையடைகிறோம்.

ஜெயராஜின் குரலை புலிகள் நிறுத்திவிட்டாலும் அவரின் கருத்தியலான, புலிகளை இந்த மண்ணிலிருந்து முற்றாக ஒழிக்கும் பணியை நாம் நிறுத்தமாட்டோம். கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியை வடக்கு மக்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம். நாம் தற்போது கடினமான மலைகளை கடந்து செல்கிறோம். ஜனாதிபதியின் பலம்பொருந்திய உற்சாகத்தினால் நாம் வெற்றியடையும் தூரம் தொலைவில் இல்லை.

வடக்கு யுத்தத்தில் படையினர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இயற்கை ஒருபுறம் தாக்குகிறது. மறுபுறத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்குகின்றனர். முருங்கன் வைத்தியசாலை மீது கூட புலிகள் தாக்கியுள்ளனர்.

காட்டிக்கொடுத்தல் வரலாறுகளால் இந்த நாடு துன்பப்பட்டது போதும். இனியும் அந்த வரலாறு தொடரக்கூடாது. இந்தியாவின் தமிழ்நாட்டில் பழநெடுமாறன் என்னும் புலிப்பயங்கரவாதி செயற்பட்டு வருகிறார். அவர் மீது இந்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

கடந்த மாதம் இடம்பெற்ற சம்பவங்களில் 93 படையினரும், 38 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். முப்படைகளை சேர்ந்த 686 பேரும் 21 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். வடக்கில் புலிகள் தோல்வியடைந்து வருவதால் விரக்தியடைந்துள்ளனர். அதனால் தான் தென்பகுதியை தாக்குகின்றனர். ஆனாலும், நாம் புலிகளை முற்றாக ஒழிக்கும் பணியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்".

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com