பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தீப ஊர்வலத்திற்கு திபெத் ஆதரவாளர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனால் ஒலிம்பிக் தீபத்தை மூன்று முறை அணைக்க வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தீபத்தை பாதுகாக்கும் வகையில் தீபத்தை பஸ்ஸில் கொண்டு செல்லும் நிலை ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இறுதியாக வந்த தகவல்களின் படி, பாரிஸின் நகர மண்டபத்தில் ஒலிம்பிக் தீபம் சம்பந்தமாக நடக்கவிருந்த வைபவம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களின் இடையூறு காரணமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் சுடரின் இந்த பயணம் இடம்பெற்ற போது அங்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு விளைவித்தனர்.
லண்டனில் நடந்த திபெத் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை பிரிவினைவாதிகளின் சீர்குலைவு நவடிக்கை என்று சீன அரசாங்கம் விபரித்திருந்தது.